Close

பொள்ளாச்சியில் 27.11.2022 அன்று நடைபெறவுள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 17/11/2022
COLLECTOR -PREMILINARY JOBFAIR MEETING

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வருகின்ற (27.11.2022) அன்று பொள்ளாச்சியில் நடைபெறவுள்ள மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கு.சண்முகசுந்தரம் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலாஅலெக்ஸ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் செல்வி.பிரியங்கா, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மு.கோகிலா, திட்ட இயக்குநர் மகளிர்திட்டம் செல்வம், உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) திரு.துவாரகநாத் சிங், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) கமலகண்ணன், வேலைவாய்ப்புத்துறை இணை இயக்குநர் ஞானசேகரன், துணை இயக்குநர் கருணாகரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சத்யா உட்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.(PDF 58 KB)