Close

மாவட்ட அளவிலான மாபெரும் கல்விக்கடன் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து மாணவ மாணவியர்களிடம் விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 14/03/2023
2023031417

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் 14.03.2023 அன்று மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான மாபெரும் கல்விக்கடன் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து மாணவ மாணவியர்களிடம் விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் இந்துமதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம் இணை பதிவாளர் சிவகுமார் , மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கௌசல்யா தேவி, மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரமணகோபால், உட்பட பலர் கலந்துகொண்டனர். (PDF 70KB)