சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் தலைமையில் தேர்தல் முன்னேற்பாடு தொடர்பான ஆய்வு கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026கோயமுத்தூர் மாவட்டம், சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், சூலூர் சட்டமன்ற தொகுதி (116), சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி (121) ஆகிய தொகுதிகளின் தேர்தல் பொது பார்வையாளர் திரு.கிருஷ்ணா ஆதித்யா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தேர்தல் முன்னேற்பாடு தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. (PDF 64KB)
மேலும் பலதிருமண மண்டப உரிமையாளர்கள், பேனர் மற்றும் ஃப்ளெக்ஸ் ஆபரேட்டர்கள், அச்சக உரிமையாளர்கள் ஆகியோரின் சங்கங்களுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026திருமண மண்டப உரிமையாளர்கள், பேனர் பிளக்ஸ் , அச்சகங்கள் ஆகிய சங்கத்தினர்கள் பின்பற்ற வேண்டிய சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026 நடத்தை விதிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்/ மாவட்ட தேர்தல் அலுவலர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 59KB)
மேலும் பலதேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026இத்தேர்தலில் அதிக அளவிலான வாக்கு சாவடிகள் பயன்படுத்தப்படவுள்ள நிலையில் முன்னாள் படைவீரர்களின் தேவையும் பாதுகாப்பு பணிக்கு அதிகரித்துள்ளது. எனவே கோயம்புத்தூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் இத்தேசம் நலன் காக்கும் இப்பணிக்கு முன்னாள் படைவீரர்கள் அனைவரும் இத்தேர்தல் பாதுகாப்பு பணியில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து விருப்பத்துடன் பணிபுரிந்திட வரவேண்டும் என அழைப்பு விடுக்கப்படுகிறது. முன்னாள் படைவீரர்களின் நேர்மை, கடமையாற்றல் மற்றும் பணியில் ஈடுபாடு இவைகளை பாராட்டியும் அங்கீகரித்தும் இவ்வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனை முன்னாள் படைவீரர்கள் முழுமனதுடன் ஏற்று இப்பணியில் […]
மேலும் பலமாற்றுத்திறனாளிகள் மற்றும் 85+ வயது வாக்காளர்களுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு வசதி – தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026இந்தியத் தேர்தல் ஆணையத்தால், சட்டமன்ற பொதுத்தேர்தல், 2026 அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட பத்து (10) சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளி வாக்காளர்கள்(40 % மேற்பட்ட) மற்றும் 85+ வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பதில் ஏற்படும் சிரமத்தினைத் தவிர்க்கும் பொருட்டு, அஞ்சல் வழியில் வாக்களித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நேர்வில், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85+ வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் விருப்பத்தினைப் பெற ஏதுவாக தங்களது இல்லங்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (Booth level Officer), […]
மேலும் பலதேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக மாவட்ட அளவில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 16/03/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–(2026) தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக மாவட்ட அளவில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், தலைமையில் நடைபெற்றது. (PDF 64KB)
மேலும் பலமாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள பறக்கும் படை குழு வாகனங்களை துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 15/03/2026இந்திய தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-க்கான தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள பறக்கும் படை குழு வாகனங்களை இன்று (15-03-2026) துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திருமதி.மகேஸ்வரி, தனி (வட்டாட்சியர்) தேர்தல் திரு.தணிகைவேல், சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உட்பட […]
மேலும் பலதேர்தல் காரணமாக திங்கள்கிழமை குறைதீர்க்கும் நாள் கூட்டமானது நிறுத்தி வைக்கப்படுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 15/03/2026இந்திய தேர்தல் ஆணையத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டு 15.03.2026 இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால் தமிழ்நாடு அரசின் முதல்வரின் முகவரித்துறையின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிரதி வாரம் திங்கள்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறவேண்டி மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடத்தப்படும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது, இந்திய தேர்தல் ஆணையத்தினால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப்பெறப்படுவது தொடர்பான மறு அறிவிப்பு வரும் வரை […]
மேலும் பல