Close

வீசி எறிப்படும் நெகிழிக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மஞ்சப்பை மின்சார மின்னணு இருசக்கர வாகன பிரச்சாரத்தை மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகரப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 06/08/2024

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 06.08.2024 அன்று வீசி எறிப்படும் நெகிழிக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தின் ஒரு அங்கமாக, “மஞ்சப்பை படையணி (Manjappai Brigade)” – என்ற பெயரில் மஞ்சப்பை மின்சார மின்னணு இருசக்கர வாகன பிரச்சாரத்தை மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகரப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் திரு.ஆர்.சந்திரசேகர், ஆர்.ராமசந்திரன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர்கள் திருமதி.லாவண்யா, திரு.செந்தில்குமார், திரு.சதீஸ்குமார், திருமதி.மோகன ஜெயவள்ளி, திரு.அபூபக்கர், உதவி பொறியாளர்கள் திருமதி.ரிஷிலா, திரு.கலைவேந்தன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். (PDF 75KB)