கோயம்புத்தூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியர்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், விடுதி நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான குறைகள் உள்ளிட்ட புகார்களை எந்நேரமும் தெரிவிக்க 9445477016 என்ற வாட்ஸ்அப் எண் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், புகார் அளிக்கும் மாணவர்களின் விவரங்கள் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும், புகாரின் விவரங்கள் மட்டுமே விசாரணை செய்யப்படும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.