Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

2026 கேரள தேர்தலை முன்னிட்டு கோயம்புத்தூர் எல்லைப் பகுதிகளில் மதுபான கடைகள் மூடல்

வெளியிடப்பட்ட நாள்: 04/04/2026

கேரள மாநிலத்தில் 2026 ஆம் ஆண்டு கேரள சட்டமன்றப் பொதுத் தேர்தல் 09.04.2026 அன்று நடைபெற உள்ளதால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 135(C)-இன் கீழ், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கோயம்புத்தூர் மாவட்டஎல்லைப் பகுதிகளில் 5 கி.மீ. சுற்றளவிற்குள் அமைந்துள்ள, அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள மதுக்கூடங்கள், மேலும் FL2 முதல் FL11 வரையிலான (FL6 தவிர) உரிமம் பெற்ற வளாகங்களை 07.04.2026 அன்று காலை 10.00 மணி முதல் […]

மேலும் பல

சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களின் அடையாள சரிபார்ப்பு வழிமுறைகள் அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 03/04/2026

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் எதிர்வரும் 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும் போது வாக்காளர் அடையாளம் காணும் செயல்முறைகள் குறித்த வழிமுறைகள் அறிவிக்கப்படுகின்றன. (PDF 71KB)

மேலும் பல

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் சிங்காநல்லூரில் 100% வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 02/04/2026

கோயம்புத்தூர் மாவட்டம், 121 சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 100% வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  (PDF 223KB)

மேலும் பல

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அட்டவணை அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 02/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026-னை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், (Representation of the People Act, 1951) இன் பிரிவு 30 மற்றும் 56ன்கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில், கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெறும் வாக்குப்பதிவிற்கான தேதி மற்றும் நேரம் தொகுதிகளிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று காலை 07.00 மணி முதல் மாலை 06.00 […]

மேலும் பல

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் 100% வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை ஒட்டி வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2026

கோயம்புத்தூர் மாநகராட்சி (120 – கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட) பகுதியில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுதேர்தல் – 2026ஐ முன்னிட்டு 100% வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை ஒட்டி வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 226KB)

மேலும் பல

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் சூலூரில் 100% வாக்களிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2026

கோயம்புத்தூர் மாவட்டம், 116 சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 100% வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. (PDF 228KB)    

மேலும் பல

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பழங்குடியினர் மக்களிடம் 100% வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

வெளியிடப்பட்ட நாள்: 31/03/2026

கோயம்புத்தூர் மாவட்டம், 111- மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபனாரி கிராமத்தில், 100% வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் பழங்குடியினர் மக்களிடம் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  (PDF 228KB)  

மேலும் பல

மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு எதிர்வரும் 01.04.2026 பங்குனி உத்திரம் தினத்தன்று நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை

வெளியிடப்பட்ட நாள்: 30/03/2026

மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் எதிர்வரும் 01.04.2026 அன்று பங்குனி உத்திரம் தினத்தன்று மேற்படி நாளில் அதிக அளவில் பக்தர்கள் வருவதை கருத்தில் கொண்டு மலைக்கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. பக்தர்கள் இரண்டு சக்கர வாகனங்கள் வழியாகவும், மலைப்படிகள் வழியாகவும், திருக்கோயிலின் பேருந்து மற்றும் திருக்கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு பேருந்துகளில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் விழாவிற்கான முன்னேற்பாடுகளை திருக்கோயில் தக்கார் மற்றும் துணை ஆணையர் / செயல் அலுவலர் […]

மேலும் பல

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 29/03/2026

கோயம்புத்தூர் மாவட்டம், 119 – தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குனியமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, 116 – சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூலூர் ஆர்.வி.எஸ் கலை அறிவியல் கல்லூரி மற்றும் 120 – கோவை (தெற்கு) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்மலா கலை அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு […]

மேலும் பல

எதிர்வரும் 31.03.2026 செவ்வாய்கிழமை மகாவீர் ஜெயந்தி தினத்தன்று மதுபானக் கடைகள் மூட உத்திரவிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 27/03/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள்/பார்கள் (FL1) பொழுதுபோக்கு மனமகிழ்மன்றங்களில்(FL2) செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில்(FL3) செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டல் (FL3A), சுற்றுலாத்துறை மூலமாக நடத்தப்படும் மதுக்கூடங்கள்(FL3AA) மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை (FL11) உள்ளிட்ட அனைத்து உரிமத்தளங்களையும் எதிர்வரும் 31.03.2026(செவ்வாய்கிழமை)மகாவீர் ஜெயந்தி(MahavirJayanti )தினத்தன்று (Dry day) மூட உத்திரவிடப்பட்டுள்ளது. (PDF 403KB)

மேலும் பல