பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் ஓய்வூதியத் திட்டத்தில் சுற்றுலாத் துறை அமைப்புச்சாரா தொழிலாளர்கள் சேர்ந்து பயன்பெற அழைப்பு
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம், சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பணிபுரியும் தகுதியுடைய அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு 60 வயதை எட்டிய பின் மாதந்தோறும் ரூ.3000/- உறுதியான ஓய்வூதியம் வழங்கும் பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் 18 முதல் 40 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள அமைப்புச்சாரா தொழிலாளர்கள் சேர்ந்து பயனடையலாம். Pradhan Mantri Shram Yogi Maandhan Scheme என்ற திட்டத்தில் தகுதியுடைய பயனாளிகள் மாதந்தோறும் நிர்ணயிக்கப்பட்ட தொகையை முறையாக […]
மேலும் பல12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூரில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் மருத்துவ முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026தேசிய கைத்தறி தினமானது, கைத்தறி நெசவாளர்களை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவுகூரும் வகையிலும், பொதுமக்களால் நடத்தப்பட்ட சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றை போற்றும் வகையிலும், உள்நாட்டு உற்பத்திப் பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கைத்தறி நெசவுத் தொழில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய தொழிலாக விளங்கி வருகிறது. இத்தொழில் ஏராளமான […]
மேலும் பலவெள்ளலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 04/08/2026கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.08.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 50KB)
மேலும் பலகோயம்புத்தூரில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ‘GENESIS நெக்ஸ்ட்ஜென் ஸ்டார்ட்அப் உச்சிமாநாடு’ நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 04/08/2026கோயம்புத்தூர் மாவட்டம், ரத்தினம் கிராண்ட் ஹாலில் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஸ்டார்ட்அப் ஹப் மற்றும் StartupTN இணைந்து “GENESIS நெக்ஸ்ட்ஜென் ஸ்டார்ட்அப் உச்சிமாநாடு – கோயம்புத்தூர் பதிப்பு” மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (04.08.2026) நடைபெற்றது. (PDF 234KB)
மேலும் பலகோயம்புத்தூரில் ரூ.9.22 கோடி மதிப்பிலான அறிவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 04/08/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.சி.ஜோசப் விஜய் அவர்கள், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக, கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதிதாக ரூ.9.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் கட்டடத்தினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்ததை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டம், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வே.சம்பத் குமார் அவர்கள் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி வைத்து, வகுப்பறை மற்றும் ஆய்வகங்களை பார்வையிட்டார். (PDF […]
மேலும் பலபிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2026-27 ஆம் ஆண்டு காரீப் பருவ பயிர்களைக் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.
வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026தமிழ்நாட்டில் 2026-27 ஆம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) Kharif பருவத்திற்கான அறிவிக்கை பெறப்பட்டு, திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் அக்கிரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிட். காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது காரீப் பருவ சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வரும் வேளையில், விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட (நெல் I, மக்காச்சோளம் I, சோளம், உளுந்து, பச்சைப்பயறு, கொள்ளுப்பயறு) பயிர்களைக் காப்பீடு செய்வதற்கான கடைசி […]
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 03-08-2026
வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (03.08.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டு, சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். (PDF 221KB)
மேலும் பலவெள்ளியங்காடு கிராமத்தில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், வெள்ளியங்காடு கிராமம், பத்ரகாளியம்மன் கோவில் அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில், 12.08.2026 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, 05.08.2026 புதன்கிழமை அன்று காலை 11.00 மணியளவில், அனைத்து துறை அலுவலர்கள் முன்னிலையில், வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு) அவர்கள் வெள்ளியங்காடு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற உள்ளார். பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை […]
மேலும் பலகோயம்புத்தூர் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை ஆகஸ்ட் 14 வரை நீட்டிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோயம்புத்தூர், கோயம்புத்தூர் (மகளிர்), ஆனைக்கட்டி, வால்பாறை மற்றும் பேரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) 2026 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. (PDF 223KB)
மேலும் பலகோயம்புத்தூர் மாவட்டத்தில் ரூ.5.09 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை அமைச்சர் திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 01/08/2026கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் மற்றும் பேரூர் வட்டாரங்களில், பல்வேறு துறைகளின் கீழ் ரூ.5.09 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத்குமார் அவர்கள் இன்று (01.08.2026) திறந்து வைத்தார். (PDF 55KB)
மேலும் பல