மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மரக்கன்றுகள் நடவு பணிகள் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 13/06/2026கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம், கொண்டம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மேய்ச்சல் நிலத்தில், தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (13.06.2026) நடைபெற்றது. (PDF 232KB)
மேலும் பலபள்ளிகளில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின அனுசரிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 13/06/2026ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. எனவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து (தனியார் மற்றும் அரசு) பள்ளிகளிலும், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை அனுசரிக்கும் பொருட்டு, அனைத்து பள்ளிகளிலும் உறுதிமொழியை எடுக்கும்படி தெரிவிக்கப்படுகிறது. (PDF 59KB)
மேலும் பலசிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவன விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
வெளியிடப்பட்ட நாள்: 13/06/2026சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் வழங்கும் பொருட்டு கருத்துருக்களை அனுப்புவதற்கான விதிமுறைகள்: தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள்,பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை,அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொண்டு நிறுவனம் […]
மேலும் பலகல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
வெளியிடப்பட்ட நாள்: 13/06/2026துணிவு மற்றும் வீரசாகச செயல்களுக்கான தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லாவிருது ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது. துணிச்சல் மற்றும் வீரசாகச செயல்புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம். (PDF 56KB)
மேலும் பலபொது விநியோக சேவைகள் குறைதீர் முகாம் ஜூன் 13 அன்று நடைபெறுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, ஜூன்-2026 மாதத்திற்கான சிறப்பு குறைதீர் முகாம் 13.06.2026 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. (PDF 226KB)
மேலும் பலஅன்னூர் வட்டத்தில் வருவாய் தீர்வாய முகாம் – 16.06.2026 முதல் 18.06.2026 வரை
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டம், 1435-ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கோயம்புத்தூர் அவர்கள் தலைமையில் எதிர்வரும் 16.06.2026, 17.06.2026 மற்றும் 18.06.2026 ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் நடைபெற உள்ளது. (PDF 225KB)
மேலும் பலகோவை வடக்கு வட்டத்தில் வருவாய் தீர்வாய முகாம் – 16.06.2026 முதல் 25.06.2026 வரை
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026கோயம்புத்தூர் மாவட்டம், வடக்கு வட்டம், 1435ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் பெரியநாயக்கன்பாளையம் உள்வட்டம் 16.06.2026 அன்றும், துடியலூர் உள்வட்டம் 17.06.2026 அன்றும், கவுண்டம்பாளையம் உள்வட்டம் 18.06.2026 அன்றும், சரவணம்பட்டி உள்வட்டம் 19.06.2026 அன்றும், கணபதி உள்வட்டம் 23.06.2026 அன்றும், சங்கனூர் உள்வட்டம் 24.06.2026 அன்றும், அனுப்பர்பாளையம் உள்வட்டம் 25.06.2026 அன்றும் நடைபெறவுள்ளது. (PDF […]
மேலும் பலவளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாண்புமிகு அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வி.சம்பத் குமார் அவர்கள் தலைமையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறத்து தொடர்புடைய துறைச்சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. (PDF 74KB)
மேலும் பலசர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வி.சம்பத் குமார் அவர்கள் தலைமையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. (PDF 56KB)
மேலும் பலகோவை வ.உ.சி. மைதானத்தில் அரசுப் பொருட்காட்சியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
வெளியிடப்பட்ட நாள்: 11/06/2026கோயம்புத்தூர் மாவட்டம், வ.உ.சி. மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரசுப் பொருட்காட்சியினை மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வி.சம்பத் குமார் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்து, பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டு, அரசுத்துறைகளின் சார்பில் 459 பயனாளிகளுக்கு ரூ.3.92 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 258KB)
மேலும் பல