Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

ATMA திட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப ஆட்சியர் அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ATMA) திட்டத்தில் காலியாக உள்ள வட்டார தொழில்நுட்ப மேலாளர் (BTM) மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் (ATM) பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக தகுதியும் அனுபவமும் கொண்ட பணிநியமன முகமைகளிடமிருந்து (Recruitment Agency) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான முகமைகள் தங்களது விவரங்கள் மற்றும் ஒப்பந்தப் புள்ளிகளை 27.08.2026க்குள் திட்ட அலுவலர் / வேளாண்மை இணை இயக்குநர், தடாகம் ரோடு, […]

மேலும் பல

சோமையம்பாளையத்தில் 1,200 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026

கோயம்புத்தூர் மாவட்டம், சோமையம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், கோவை வனத்துறை மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்கம் – நலச்சோலை திட்டத்தின்கீழ் 1200 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியினை மாவட்ட வன அலுவலர் (கோவை வனக்கோட்டம்) திரு.வெங்கடேஷ் பிரபு இ.வ.ப., அவர்கள், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.பாலுசாமி ஆகியோர் இன்று (20.08.2026) துவக்கி வைத்தனர். (PDF 56KB)  

மேலும் பல

28.08.2026 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஆகஸ்ட் 2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 28.08.2026 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாவது தள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகிக்க உள்ளார். மாவட்ட விவசாயிகள் நேரடியாக கலந்து கொண்டு, தங்களது விவசாயம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து மனுக்களை அளித்து தீர்வு காணுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (PDF 216KB)

மேலும் பல

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு கடன் திட்டங்கள் – ஆட்சியர் அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினரின் பொருளாதார முன்னேற்றத்திற்காக தனிநபர் கடன், குழுக் கடன், கறவை மாடு கடன் மற்றும் வெளிநாட்டு உயர்கல்விக்கான கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தகுதியுடையவர்களுக்கு தனிநபர் கடனாக அதிகபட்சம் ரூ.25 இலட்சம் வரையும், சுய உதவிக்குழுக்களுக்கு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சம் ரூ.1.25 இலட்சம் வரையும், குழுவிற்கு அதிகபட்சம் ரூ.25 இலட்சம் வரையும் கடனுதவி வழங்கப்படுகிறது. கறவை மாடு […]

மேலும் பல

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தில் ஆட்சியர் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் வடக்கு, பெரியநாயக்கன்பாளையம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப.,, அவர்கள் இன்று (19.08.2026) கள ஆய்வு மேற்கொண்டு, பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். (PDF 103KB)

மேலும் பல

திருநங்கைகளுக்கு சுற்றுலா வழிகாட்டி பயிற்சி

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026

தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் சார்பில், சுற்றுலாவில் ஆர்வமுள்ள  பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, (Transgender) திருநங்கைகளுக்கு சுற்றுலா வழிகாட்டி பயிற்சி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் சுற்றுலா வழிகாட்டியாகப் பணிபுரிய விருப்பமுள்ள தகுதியுடைய திருநங்கைகள் இப்பயிற்சி திட்டத்தில் கலந்து கொள்ளலாம். மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு சாரா அமைப்புகள் மற்றும் சங்கங்கள் இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை திருநங்கைகளிடையே ஏற்படுத்தி, தகுதியும் ஆர்வமும் உள்ள திருநங்கைகளின் பெயர் விவரங்களைச் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்திட்டம் […]

மேலும் பல

கோயம்புத்தூரில் RMV கோப்பை 2026 பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026

கோயம்புத்தூர் மாவட்டம், விவேகானந்தா ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகத்தில்,  RMV கோப்பை 2026 – மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியினை இன்று (19.08.2026) மாவட்ட  ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் துவக்கி  வைத்து, போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தார். (PDF 68KB)

மேலும் பல

கம்பாலப்பட்டியில் ரூ.5.94 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026

கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை ஊராட்சி ஒன்றியம், கம்பாலப்பட்டியில் ரூ.5.94 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (18.08.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 67KB)

மேலும் பல

மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் 85 தற்காலிக பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில், கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகம், கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, துணை இயக்குநர், குடும்ப நல அலுவலகம், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்கள், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் தொகுப்பூதிய அடிப்படையில், முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன: ஆய்வக நுட்புநர் நிலை-III (Lab Technician Gr-III) – 3 பணியிடங்கள் தொழில்சார் சிகிச்சையாளர் (DEIC) – 1 பணியிடம் மாவட்ட திட்ட மேலாளர் […]

மேலும் பல

முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்ந்த 36 அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (17.08.2026), அரசுப் பள்ளிகளில் பயின்று நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள 36 மாணாக்கர்களையும், அவர்களது பெற்றோர்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், GD Trust சார்பில் 48 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.10.22 இலட்சம் மதிப்பிலான காசோலைகளை வழங்கி, அவர்களை ஊக்குவித்தார். (PDF 63KB)

மேலும் பல