TANFINET தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு: நிதித் தகுதி தளர்வு
வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களுக்கு உயர்தர இணைய சேவைகளை வழங்குவதற்காக, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET) மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்து வருகிறது. அதிகமான விண்ணப்பதாரர்கள் பங்கேற்கும் வகையில், கடந்த மூன்று நிதியாண்டுகளின் சராசரி ஆண்டு வருவாய் ₹50 லட்சத்திலிருந்து ₹20 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் பதிவு 12.08.2026 முதல் TANFINET இணையதள போர்டலில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அதிகபட்சம் இரண்டு மாவட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் […]
மேலும் பலஅரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோயம்புத்தூர், கோயம்புத்தூர் (மகளிர்), ஆனைக்கட்டி, வால்பாறை மற்றும் பேரூர் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்ஸ், கம்ப்யூட்டர் மற்றும் அப்பேரல் தொடர்புடைய தொழிற்பிரிவுகள், டிரோன் பைலட், இன்டஸ்ட்ரிஸ் ரோபோட்டிக்ஸ், எலக்ட்ரிக் வெகிக்கிள் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட தொழிற்பிரிவுகளுக்கு 2026 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. 8 / 10 / 11 / 12 ஆம் வகுப்பு மற்றும் டிகிரி, டிப்ளமோ படித்த 14 வயது முதல் 40 […]
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 18-08-2026
வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், இன்று (17.08.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டு, சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். (PDF 66KB)
மேலும் பலசுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிறப்பு பார்வையாளராக பங்கேற்பு
வெளியிடப்பட்ட நாள்: 15/08/2026கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் ஊராட்சி ஒன்றியம், அரசூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் கிராமசபை கூட்டம் இன்று (15.08.2026) நடைபெற்றது. இக்கிராம சபைகூட்டத்தில் மாவட்ட ஆட்சிதலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார். (PDF 77KB)
மேலும் பல80வது சுதந்திர தின விழா: கோயம்புத்தூரில் தேசியக் கொடியேற்றி தியாகிகளின் வாரிசுதாரர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கௌரவித்தார்
வெளியிடப்பட்ட நாள்: 15/08/2026கோயம்புத்தூர் மாவட்டம், வ.உ.சிமைதானத்தில் இன்று (15.08.2026) நடைபெற்ற சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, மூவர்ண பலூன்களையும் மற்றும் சமாதானப்புறாக்களையும் பறக்கவிட்டார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கும், மொழி போராட்ட தியாகிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்தார். (PDF 72KB)
மேலும் பல“உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்டம்: கோயம்புத்தூர் வடக்கு வட்டத்தில் ஆகஸ்ட் 19 முதல் முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026தமிழ்நாடு அரசு, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலர் அவர்களின் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டவாறு, மக்களை நேரடியாக அணுகி அவர்களது குறைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வுகாணும் வகையில், அரசு இயந்திரமே களத்திற்கு வரும் “உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு மாதமும் மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு வட்டத்தில் தங்கியிருந்து கள ஆய்வில் ஈடுபட்டு, அந்த வட்டத்தில் உள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களுக்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தடையின்றிச் சென்றடைவதை உறுதி […]
மேலும் பலகோயம்புத்தூரில் ஆகஸ்ட் 22 அன்று மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி இரத்தினம் குளோபல் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக எதிர்வரும் 22.08.2026 அன்று நடைபெறவுள்ள மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமிற்கான அனைத்துத்துறை அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் 13.08.2026 மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 226KB)
மேலும் பலமுதலமைச்சர் ஆகஸ்ட் 17 அன்று வருகையில்லா ஆவணப்பதிவு நடைமுறையைத் தொடங்கி வைக்கிறார்
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பத்திரப் பதிவுத்துறையில் வருகையில்லா ஆவணப்பதிவு நடைமுறையினை வருகின்ற 17.08.2026 அன்று துவக்கி வைக்கவுள்ளார். ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் நடைபெற்ற வருகையில்லா ஆவணப்பதிவு நடைமுறை குறித்தான கலந்தாய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் தகவல். (PDF 246KB)
மேலும் பலமருத்துவமனையில் கைவிடப்பட்ட “பூவிழி” பெண் குழந்தை: 30 நாட்களுக்குள் உரிமை கோரலாம்
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 27.04.2026 அன்று பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுச் சென்ற நிலையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகப் பணியாளர்களால் குழந்தை மீட்கப்பட்டு 08.07.2026 அன்று குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தைக்கு “பூவிழி” என பெயரிடப்பட்டுள்ளது. குழந்தை தொடர்பாக உரிமை கோர விரும்புவோர், உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை அணுக வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் யாரும் உரிமை […]
மேலும் பலமீட்கப்பட்ட “ஆதித்தியன்” குழந்தை தொடர்பாக 30 நாட்களுக்குள் உரிய ஆவணங்களுடன் உரிமை கோரலாம்
வெளியிடப்பட்ட நாள்: 14/08/202613.07.2026 அன்று கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், அரசிபாளையத்தில் மீட்கப்பட்ட ஆண் குழந்தை, சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. பின்னர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகப் பணியாளர்கள் மூலம் குழந்தை மீட்கப்பட்டு, 29.07.2026 அன்று குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தைகள் நலக்குழு அந்தக் குழந்தைக்கு “ஆதித்தியன்” என பெயரிட்டுள்ளது. மேற்கண்ட குழந்தை தொடர்பாக உரிமை கோர விரும்புவோர், உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் கோயம்புத்தூர் […]
மேலும் பல