சிறப்பு நோய்த்தடுப்பு முகாமில் அமைச்சர் அவர்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 28/06/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்ககம் சார்பில், தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் – 2026யை தொடங்கி வைத்தை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டத்தில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வி.சம்பத்குமார் அவர்கள், தேசிய போலியோ சொட்டு மருந்தினை குழந்தைகளுக்கு வழங்கினார். (PDF 65KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் பள்ளி மாணவ, மாணவியர்களுடன் ‘காபி வித் கலெக்டர்’ கலந்துரையாடல் நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 27/06/2026கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பள்ளி மாணவ, மாணவியர்களுடன் (காபி வித் கலெக்டர்) என்ற கலந்துரையா டல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 229KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ‘ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ்’ விழிப்புணர்வு மராத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 26/06/2026கோயம்புத்தூர் மாவட்டம், நேரு விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான “ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs’ விழிப்புணர்வு மரத்தான் ஓட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். (PDF 248KB)
மேலும் பலகோயம்புத்தூர் அரசுப் பொருட்காட்சி: 62 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வை
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026அரசுப் பொருட்காட்சியினை (24.06.2026) நேற்று வரை 62,536 நபர்கள் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.8.95 இலட்சம் வருவாய் வரப்பெற்றுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 223KB)
மேலும் பலகோயம்புத்தூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026கோயம்புத்தூர் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 219KB)
மேலும் பலமாண்புமிகு அமைச்சர் தலைமையில் தொழில்நுட்ப ஜவுளி கூட்டம்: ரூ.123 கோடி மதிப்பிலான 5 ஒப்பந்தங்கள் கையெழுத்து
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் திரு.ம.விஜய் பாலாஜி அவர்கள் தலைமையில் நடைபெற்ற தொழில்நுட்ப ஜவுளிகளுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் ரூ.123 கோடி மதிப்பில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. (PDF 92KB)
மேலும் பலகோயம்புத்தூர் மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கை தலைமை தேர்தல் அதிகாரி அவர்கள் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026கோயம்புத்தூர் மாவட்டம், தெற்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான வைப்புக் கிடங்கினை இன்று (24.06.2026) தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் திருமதி.அர்ச்சனா பட் நாயக் இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், காலாண்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 219KB)
மேலும் பலசுந்தராபுரம் சமூக நீதி மாணவர் விடுதியில் வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம், சுந்தராபுரம் பகுதியில் இயங்கி வரும் சமூக நீதி மாணவர் விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (24.06.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 58KB)
மேலும் பலஉலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் – கிறித்துவ தேவாலய பணியாளர்கள் நல வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் – விண்ணப்பிக்க அழைப்பு
வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கீழ்க்கண்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை கல்வி உதவித்தொகை திருமண உதவித்தொகை மகப்பேறு உதவித்தொகை மூக்குக்கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல் முதியோர் ஓய்வூதியம் மேற்படி நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல் மற்றும் நலத்திட்ட உதவிகளை பெறுவதை எளிதாக்கும் வகையில் பிரத்யேக இணையதளம் […]
மேலும் பலகிறித்துவ தேவாலய பணியாளர்கள் நல வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் – விண்ணப்பிக்க அழைப்பு
வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கீழ்க்கண்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை கல்வி உதவித்தொகை திருமண உதவித்தொகை மகப்பேறு உதவித்தொகை மூக்குக்கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல் முதியோர் ஓய்வூதியம். மேற்படி நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல் மற்றும் நலத்திட்ட உதவிகளை பெறுவதை எளிதாக்கும் […]
மேலும் பல