Close

தேசிய நுகர்வோர் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்‌ வழங்கினார்‌

வெளியிடப்பட்ட தேதி : 30/03/2023

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 30.03.2023 அன்று உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் தேசிய நுகர்வோர் தின விழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் ஆர்.தங்கவேல், முதன்மை இயக்குநர் இந்திய தர நிர்ணயம் அமைவனம் வி.கோபிநாத், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் மரு.கே.தமிழ்செல்வன், மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன், அன்னை கஸ்தூரிபா லேடீஸ் அண்டு கன்ஸ்யூமர் அசோசியேசன் தலைவர் மகாலட்சுமி சுப்பிரமணியம், வட்ட வழங்கல் அலுவலர் கவிதா, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். (PDF 75KB)