Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 08-06-2026

வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026

கோயம்புத்தூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF  221KB)    

மேலும் பல

SSC CGL 2026 தேர்வு அறிவிப்பு வெளியீடு

வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை (CGL) தேர்வு–2026க்கான விரிவான வேலைவாய்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. (PDF  414KB)

மேலும் பல

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது – 2026

வெளியிடப்பட்ட நாள்: 06/06/2026

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும்  பொருட்டு, “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று  15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இந்த விருது, ரூபாய் 1,00,000/- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.        அதன்படி, 2026-ஆம் ஆண்டிற்கான “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” எதிர்வரும்  15.08.2026  அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது.  (PDF […]

மேலும் பல

பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 06/06/2026

கோயமுத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டங்களில், தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்   திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 235KB)

மேலும் பல

மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் சமூகநீதி விடுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026

கோயமுத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டம், சொக்காம்பாளையத்தில் செயல்பட்டு வரும் சமூகநீதி விடுதிகளை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வி.சம்பத்குமார் அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 55KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் 100% 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 73 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், 2025 – 2026ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 73 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க. கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கி, பாராட்டினார். (PDF 145KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் உலக சுற்றுச்சூழல் தினத்தில் 1200 மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026

கோயம்புத்தூர் மாவட்டம் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு செட்டிபாளையம் பேரூராட்சி, ஓராட்டுகுப்பை பகுதியில் 1200 மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 243KB)

மேலும் பல

முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கான குறைதீர்வு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026

09.06.2026 அன்று மெட்ராஸ் இன்ஜினியர் குரூப் (The Madras Engineer Group Records) ஆவணக் காப்பகம் நடத்தும் திரளணியில், இராணுவத்தின் அனைத்து படைப்பிரிவுகளிலும் பணியாற்றி போரில் உயிர்நீத்த மற்றும் ஊனமுற்ற படைவீரர்களின் சார்ந்தோர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கான ஓய்வூதியம், SPARSH மற்றும் இதர குறைகளுக்கான குறைதீர்வு நிகழ்ச்சி 09.06.2026 அன்று காலை 09.00 மணியளவில் பீளமேடு, அவினாசி ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. (PDF 192KB)

மேலும் பல

வட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில், 1435-ம் பசலிஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி)  குறிப்பிட்ட நாட்களில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ள கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவிக்கை விடுத்துள்ளார்.(PDF 100KB)

மேலும் பல

கோவை அரசுப் பொருட்காட்சி 2026: முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 03/06/2026

கோயம்புத்தூர் மாவட்டம் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், வ.உ.சி மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி  – 2026  நடத்துவது தொடர்பான  முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து அரசு துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்  மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர்  இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 243KB)

மேலும் பல