Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

ஸ்கால் இன்டர்நேஷனல் இந்தியா தேசிய மாநாடு 2026: கோயம்புத்தூரில் தொடக்க விழா நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 13/08/2026

கோயம்புத்தூர் லீ மெரிடியன் ஹோட்டலில், சுற்றுலாத் துறையின் சார்பில், சர்வதேச அளவில் தொடர்புகளை மேம்படுத்தும் வகையில் (SKAL INTERNATIONAL INDIA NATIONAL CONGRESS – 2026) ஸ்கால் இன்டர்நேஷனல் இந்தியாவின் தேசிய மாநாடு 2026 தொடக்க விழா நிகழ்ச்சியினை மாண்புமிகு சுற்றுலா த்துறை அமைச்சர் திரு.எஸ்.ராஜேஷ் குமார், அவர்கள், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வே.சம்பத்குமார் அவர்கள் முன்னிலையில் இன்று (13-08-2026) தொடங்கி வைத்தார். (PDF 238KB)

மேலும் பல

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடல் – “Dry Day” அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 13/08/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள்/பார்கள் (FL1) பொழுதுபோக்கு மனமகிழ்மன்றங்களில் (FL2) செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் (FL3) செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டல் (FL3A), சுற்றுலாத்துறை மூலமாக நடத்தப்படும் மதுக்கூடங்கள் (FL3AA) மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் (FL11) உள்ளிட்ட அனைத்து உரிமத்தளங்களையும் எதிர்வரும் 15.08.2026 (சனிக்கிழமை) சுதந்திர தினத்தன்று Dry day ஆக அறிவித்து அனைத்து மதுபான உரிமத்தளங்களை மூட உத்திரவிடப்படுகிறது. விதிமுறைகளுக்கு முரணாக மேற்குறிப்பிட்ட தேதியில் மதுபானங்கள் விற்பனை […]

மேலும் பல

80வது சுதந்திர தின விழா: கோயம்புத்தூர் வ.உ.சி. மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தேசியக் கொடியேற்றுகிறார்

வெளியிடப்பட்ட நாள்: 13/08/2026

கோயம்புத்தூர் மாவட்டம், வ.உ.சிமைதானத்தில் எதிர்வரும் (15.08.2026) சனிக்கிழமை நடைபெறவுள்ள 80வது சுதந்திர தினவிழாவில் காலை 8.50 மணிக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ள உள்ளார். (PDF 75KB)

மேலும் பல

“போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” விழிப்புணர்வு: கோயம்புத்தூரில் கல்லூரி மாணவர்களின் மனித சங்கிலி நிகழ்வு

வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026

கோயம்புத்தூர் மாவட்டம், ரேஸ்கோர்ஸ் மீடியா டவர் பகுதியில், “போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற இலக்கை வலியுறுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்வினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் இன்று (12.08.2026) துவக்கி வைத்தார். (PDF 224KB)  

மேலும் பல

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்: 98 பயனாளிகளுக்கு ரூ.1.66 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், வெள்ளியங்காடு கிராமம், பத்ரகாளியம்மன் கோவில் அருகிலுள்ள சமுதாயக் கூடத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் இன்று (12.08.2026) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 98 பயனாளிகளுக்கு ரூ.1.66 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 82KB)

மேலும் பல

தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.2.40 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026

கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.08.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 61KB)

மேலும் பல

தென்னை சார்பொருட்கள் ஏற்றுமதி தொடர்பான வழிகாட்டு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026

13.08.2026 அன்று காலை 10.00 மணியளவில், பொள்ளாச்சி தென்னை சார்பொருட்கள் ஏற்றுமதி குழுமத்தில் (காயர் ஏற்றுமதி மையம், தள எண். 4, ரைட் கொங்கு சிட்டி, கோயம்புத்தூர் பிரதான சாலை, ஆச்சிப்பட்டி அஞ்சல், பொள்ளாச்சி – 642002) தென்னை சார்பொருட்கள் ஏற்றுமதி தொடர்பான வழிகாட்டு முகாம் நடைபெற உள்ளது. (PDF 227KB)

மேலும் பல

முதலமைச்சர் கோப்பை 2026–27: கோயம்புத்தூர் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பதிவு தொடக்கம்

வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2026–27 மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் செப்டம்பர் முதல் அக்டோபர் 2026 வரை நடைபெறவுள்ளன. இந்த ஆண்டு புதிதாக சேர்க்கப்பட்ட விளையாட்டுகள் உட்பட மொத்தம் 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. கோயம்புத்தூர் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க 06.08.2026 முதல் 31.08.2026 மாலை 6.00 மணி வரை இணையவழியில் முன்பதிவு செய்யலாம். (PDF 243KB)

மேலும் பல

“போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” பெருந்திரள் உறுதிமொழி

வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் சென்னை, மாநிலக் கல்லூரி அரங்கில் போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு – DRUG FREE TAMIL NADU – மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றதை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில்  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பெருந்திரள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டு, 5  பள்ளி  மற்றும் கல்லூரிகளுக்கு  விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். (PDF […]

மேலும் பல

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க நாள் முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 10/08/2026

கோயம்புத்தூர்  மாவட்டத்தில்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், தேசிய  குடற்புழு  நீக்க  நாள்  முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், தொடங்கி வைத்தார். (PDF 69KB)

மேலும் பல