Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

மகளிர் விடுதிகள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கான உரிமப் பதிவு மற்றும் புதுப்பித்தல்

வெளியிடப்பட்ட நாள்: 03/06/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் முதியோர் இல்லங்கள் அனைத்தும் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் ஒழுங்குமுறைசட்டம், 2014-இன்படி உரிமம் பெறாமல் செயல்படுவது குற்றம் என்றும், இணையதளத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பித்தல் மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 418KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 02/06/2026

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில்  நடைபெற்றது. (PDF 83 KB)

மேலும் பல

MSME யின் அவசரகால கடன் வரம்பு உத்தரவாதத் திட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 02/06/2026

கோயமுத்தூர் மாவட்டம், கொடிசியா அலுவலகத்தில் எதிர்வரும் 05.06.2026 அன்று அவசரகால கடன் வரம்பு உத்தரவாதத் திட்டம் (ECLGS 5.0) குறித்த MSME விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. (PDF 226KB)

மேலும் பல

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர் / மாணவியர்களுக்கான விடுதிகள்

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026

தமிழ்நாடு அரசால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் /மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் நல மாணவர் / மாணவியர்களுக்கென  மொத்தம் 25 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. (PDF 143KB)

மேலும் பல

மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் 

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026

கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.க.விக்னேஷ் அவர்கள் தலைமையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்ந்த பணி ஆய்வுக்கூட்டம்  இன்று  (01.06.2026)  நடைபெற்றது. (PDF 235KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 01-06-2026

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026

கோயம்புத்தூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF  223KB)

மேலும் பல

பழங்குடியினருக்கான TNPSC சிறப்பு பயிற்சி மையம்

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ், இயங்கும் கோவை, ஆதிதிராவிடர் / பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டும்  நிலையம் சார்பில்  தோலம்பாளையம், வெள்ளியங்காடு மற்றும் பாலமலை ஆகிய பகுதிகளை சார்ந்த பழங்குடியின மக்கள் பயன்பெறும் வண்ணம் வெள்ளியங்காடு கிராமத்தில் உள்ள சமுதாயகூடத்தில் இந்நிலையத்தின் சார்பில் பழங்குடியினருக்கான  இலவச கட்டணமில்லா  சிறப்பு TNPSC பயிற்சி மையம் துவங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பானது வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.  (PDF 255KB)

மேலும் பல

மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் நீலம்பூர் முதல் மதுக்கரை வரை உள்ள NH-544 கோயம்புத்தூர் புறவழிச்சாலையை விரிவுபடுத்தும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் .

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026

கோயம்புத்தூர் மாவட்டம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சார்பில் நீலம்பூர் முதல் மதுக்கரை வரை உள்ள NH-544 கோயம்புத்தூர் புறவழிச்சாலையை 2 வழிச்சாலையிலிருந்து இரு புறசேவைச் சாலைகளுடன் கூடிய நவீன 6 வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணிகளை மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் . (PDF 74KB)

மேலும் பல

பொதுத் தேர்தலுக்கு முந்தைய கடைசி 72 மணி நேரத்திற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் (SOP) குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் பின்பற்றுவது தொடர்பான கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026

கோயமுத்தூர் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு முந்தைய கடைசி 72 மணி நேரத்திற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் (SOP) குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் பின்பற்றுவது தொடர்பான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF  83KB)

மேலும் பல

2026 கேரள தேர்தலை முன்னிட்டு கோயம்புத்தூர் எல்லைப் பகுதிகளில் மதுபான கடைகள் மூடல்

வெளியிடப்பட்ட நாள்: 04/04/2026

கேரள மாநிலத்தில் 2026 ஆம் ஆண்டு கேரள சட்டமன்றப் பொதுத் தேர்தல் 09.04.2026 அன்று நடைபெற உள்ளதால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 135(C)-இன் கீழ், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கோயம்புத்தூர் மாவட்டஎல்லைப் பகுதிகளில் 5 கி.மீ. சுற்றளவிற்குள் அமைந்துள்ள, அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள மதுக்கூடங்கள், மேலும் FL2 முதல் FL11 வரையிலான (FL6 தவிர) உரிமம் பெற்ற வளாகங்களை 07.04.2026 அன்று காலை 10.00 மணி முதல் […]

மேலும் பல