அமைச்சர்கள் முன்னிலையில் 248 மருத்துவ மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன
வெளியிடப்பட்ட தேதி : 20/06/2026
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மரு. கே.ஜி. அருண்ராஜ் அவர்கள், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வி. சம்பத்குமார் அவர்கள் மற்றும் மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. க. விக்னேஷ் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் நடைபெற்ற 5-வது பட்டமளிப்பு விழாவில் 100 மருத்துவ மாணவர்களுக்கும், கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 55-வது பட்டமளிப்பு விழாவில் 148 மருத்துவ மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கி பாராட்டினார். (PDF 83KB)
