மருத்துவமனையில் கைவிடப்பட்ட “பூவிழி” பெண் குழந்தை: 30 நாட்களுக்குள் உரிமை கோரலாம்
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 27.04.2026 அன்று பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுச் சென்ற நிலையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகப் பணியாளர்களால் குழந்தை மீட்கப்பட்டு 08.07.2026 அன்று குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தைக்கு “பூவிழி” என பெயரிடப்பட்டுள்ளது. குழந்தை தொடர்பாக உரிமை கோர விரும்புவோர், உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை அணுக வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் யாரும் உரிமை […]
மேலும் பலமீட்கப்பட்ட “ஆதித்தியன்” குழந்தை தொடர்பாக 30 நாட்களுக்குள் உரிய ஆவணங்களுடன் உரிமை கோரலாம்
வெளியிடப்பட்ட நாள்: 14/08/202613.07.2026 அன்று கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், அரசிபாளையத்தில் மீட்கப்பட்ட ஆண் குழந்தை, சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. பின்னர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகப் பணியாளர்கள் மூலம் குழந்தை மீட்கப்பட்டு, 29.07.2026 அன்று குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தைகள் நலக்குழு அந்தக் குழந்தைக்கு “ஆதித்தியன்” என பெயரிட்டுள்ளது. மேற்கண்ட குழந்தை தொடர்பாக உரிமை கோர விரும்புவோர், உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் கோயம்புத்தூர் […]
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வங்கிகளின் மாவட்ட ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 ஆம் ஆண்டு ஜூன் காலாண்டிற்கான வங்கிகளின் மாவட்ட ஆலோசனைக் குழு (District Consultative Committee) கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் DCC குழுத் தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் 13-08-2026 அன்று நடைபெற்றது. (PDF 227KB)
மேலும் பல“போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” விழிப்புணர்வு: கோயம்புத்தூரில் மாணவர்களின் போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் “போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிராக மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் இன்று (14.08.2026) கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 227KB)
மேலும் பலஸ்கால் இன்டர்நேஷனல் இந்தியா தேசிய மாநாடு 2026: கோயம்புத்தூரில் தொடக்க விழா நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2026கோயம்புத்தூர் லீ மெரிடியன் ஹோட்டலில், சுற்றுலாத் துறையின் சார்பில், சர்வதேச அளவில் தொடர்புகளை மேம்படுத்தும் வகையில் (SKAL INTERNATIONAL INDIA NATIONAL CONGRESS – 2026) ஸ்கால் இன்டர்நேஷனல் இந்தியாவின் தேசிய மாநாடு 2026 தொடக்க விழா நிகழ்ச்சியினை மாண்புமிகு சுற்றுலா த்துறை அமைச்சர் திரு.எஸ்.ராஜேஷ் குமார், அவர்கள், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வே.சம்பத்குமார் அவர்கள் முன்னிலையில் இன்று (13-08-2026) தொடங்கி வைத்தார். (PDF 238KB)
மேலும் பலஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடல் – “Dry Day” அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2026கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள்/பார்கள் (FL1) பொழுதுபோக்கு மனமகிழ்மன்றங்களில் (FL2) செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் (FL3) செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டல் (FL3A), சுற்றுலாத்துறை மூலமாக நடத்தப்படும் மதுக்கூடங்கள் (FL3AA) மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் (FL11) உள்ளிட்ட அனைத்து உரிமத்தளங்களையும் எதிர்வரும் 15.08.2026 (சனிக்கிழமை) சுதந்திர தினத்தன்று Dry day ஆக அறிவித்து அனைத்து மதுபான உரிமத்தளங்களை மூட உத்திரவிடப்படுகிறது. விதிமுறைகளுக்கு முரணாக மேற்குறிப்பிட்ட தேதியில் மதுபானங்கள் விற்பனை […]
மேலும் பல80வது சுதந்திர தின விழா: கோயம்புத்தூர் வ.உ.சி. மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தேசியக் கொடியேற்றுகிறார்
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2026கோயம்புத்தூர் மாவட்டம், வ.உ.சிமைதானத்தில் எதிர்வரும் (15.08.2026) சனிக்கிழமை நடைபெறவுள்ள 80வது சுதந்திர தினவிழாவில் காலை 8.50 மணிக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ள உள்ளார். (PDF 75KB)
மேலும் பல“போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” விழிப்புணர்வு: கோயம்புத்தூரில் கல்லூரி மாணவர்களின் மனித சங்கிலி நிகழ்வு
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026கோயம்புத்தூர் மாவட்டம், ரேஸ்கோர்ஸ் மீடியா டவர் பகுதியில், “போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற இலக்கை வலியுறுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்வினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் இன்று (12.08.2026) துவக்கி வைத்தார். (PDF 224KB)
மேலும் பலமேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்: 98 பயனாளிகளுக்கு ரூ.1.66 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், வெள்ளியங்காடு கிராமம், பத்ரகாளியம்மன் கோவில் அருகிலுள்ள சமுதாயக் கூடத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் இன்று (12.08.2026) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 98 பயனாளிகளுக்கு ரூ.1.66 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 82KB)
மேலும் பலதொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.2.40 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.08.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 61KB)
மேலும் பல