Close

ஊடக வெளியீடுகள்

Filter:

கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதிய பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிருக்கு, மகளிர் உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அவர்கள் கலந்துகொண்டு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 10/11/2023

கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதிய பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிருக்கு, மகளிர் உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை திரு.சு.முத்துசாமி அவர்கள் கலந்துகொண்டு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார் . இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப., மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுருபிரபாகரன் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மோ.ஷர்மிளா, மாநகராட்சி துணை மேயர் திரு.இரா.வெற்றிச்செல்வன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.நா.கார்த்திக், மாவட்ட ஊரக வளர்ச்சி […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் – 2024 முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்

வெளியிடப்பட்ட நாள்: 03/11/2023

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் – 2024 முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 90KB)

மேலும் பல

தமிழ்நாடு அரசின்‌ ‌சார்பில் கட்டப்பட்டு வரும்‌ நினைவகம்‌ மற்றும்‌ நூலக கட்டிடப்‌ பணிகளின்‌ ஆய்வின்போது, மாண்புமிகு தமிழ்‌ வளர்ச்சி மற்றும்‌ செய்தித்‌ துறை அமைச்சர்‌ அவர்கள்‌ தந்தை பெரியாரின்‌ திருவுருவச்சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்‌.

வெளியிடப்பட்ட நாள்: 03/11/2023

கேரள மாநிலம்‌ கோட்டயம்‌ மாவட்டம்‌ வைக்கம்‌ பகுதியில்‌ அமையப்பெற்றுள்ள தந்தை பெரியார்‌ நினைவகத்தில்‌ தமிழ்நாடு அரசின்‌ சார்பில்‌‌ கட்டப்பட்டு வரும்‌ நினைவகம்‌ மற்றும்‌ நூலக கட்டிடப்‌ பணிகளின்‌ ஆய்வின்போது, மாண்புமிகு தமிழ்‌ வளர்ச்சி மற்றும்‌ செய்தித்‌ துறை அமைச்சர்‌ திரு.மு.பெ.சாமிநாதன்‌ அவர்கள்‌ 03.11.2023 அன்று தந்தை பெரியாரின்‌ திருவுருவச்சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்‌. அருகில்‌ செய்தித்‌ துறை இயக்குநர்‌ திரு.த.மோகன்‌ இ.ஆ.ப., பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்‌ திரு.எஸ்‌.ரமேஷ்குமார்‌, தமிழ்நாடு அரசின்‌ கேரள மாநில தொடர்பு அலுவலர்‌ திரு.ஆர்‌.உண்ணிகிருஷ்னன்‌ […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு ஆம்னி பஸ்களில் பயணம் செய்யும் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பது போன்ற குறைகளை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் வாட்ஸ்அப் புகார் எண்ணை அறிவித்துள்ளார்

வெளியிடப்பட்ட நாள்: 18/10/2023

பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு ஆம்னி பஸ்களில் பயணம் செய்யும் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பது போன்ற குறைகளை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் வாட்ஸ்அப் புகார் எண்ணை அறிவித்துள்ளார். (PDF 240KB)

மேலும் பல

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைப் பணிகள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 24/09/2023

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ 24.9.2023 அன்று கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட துளசி நகரில்‌ அமைக்கப்பட்டு வரும்‌ தார்‌ சாலை பணியினை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செயதார்‌. இந்த ஆய்வின்போது, மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்‌ துறை அமைச்சர்‌ திரு.கே.என்‌.நேரு, மாண்புமிகு உயர்கல்வித்‌ துறை அமைச்சா்‌ முனைவர்‌ க.பொன்முடி, கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேயர்‌ திருமதி.கல்பனா ஆனந்தகுமார்‌, மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ திரு.கிராந்தி குமார்‌ பாடி இ.ஆ.ப., கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையா்‌ திரு. மு.பிரதாப்‌ இ.ஆ.ப., உள்ளாட்சி […]

மேலும் பல

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான பேறுகால தாய்சேய் மனநலம் பேணுவதற்கான பயிற்சியை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்து, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பயிற்சி கையேடுகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 14/09/2023

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை நகராட்சி, சமுதாய நலக்கூடத்தில் 14.09.2023 அன்று மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான ஒருங்கிணைந்த போதை மீட்பு மற்றும் பின் பேறுகால தாய்சேய் மனநலம் பேணுவதற்கான பயிற்சியை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் துவக்கி வைத்து, போதை மீட்பு கையேடு, பின் பேறுகால தாய்சேய் மனநலக் கையேடு ஆகிய பயிற்சி கையேடுகளை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பயிற்சி கையேடுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப., […]

மேலும் பல

டாக்டர் பாலசுந்தரம் சாலையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில், ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதி கட்டப்படவுள்ள இடங்களை மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 31/08/2023

டாக்டர் பாலசுந்தரம் சாலையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில், ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதி கட்டப்படவுள்ள இடங்களை 31.08.2023 அன்று மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி.கயல்விழி செல்வராஜ் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மோ.ஷர்மிளா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்(பொ) திரு.சுரேஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.நா.கார்த்திக், தாட்கோ செயற்பொறியாளர் திருமதி. சரஸ்வதி கலந்துகொண்டனர்.(PDF 250KB)  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கோயம்புத்தூர் மாவட்டம், குழந்தைகள் நலக்குழுவில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் ஆகிய பணியிடத்தை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 24/08/2023

கோயம்புத்தூர் மாவட்டம், குழந்தைகள் நலக்குழுவில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் ஆகிய பணியிடத்தை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. (PDF 405KB)

மேலும் பல
2023081892-scaled.jpg

கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌, ஈச்சனாரி கற்பகம்‌ கலை அறிவியல்‌ கல்லூரியில்‌ கல்வி கடன்‌ வழங்கும்‌ முகாம்‌ நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு பணிகள்‌ குறித்து மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அவர்கள்‌ அனைத்து துறை அலுவலர்களுடன்‌ ஆய்வு மேற்கொண்டார்‌.

வெளியிடப்பட்ட நாள்: 17/08/2023

கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌, ஈச்சனாரி கற்பகம்‌ கலை அறிவியல்‌ கல்லூரியில்‌ கல்வி கடன்‌ வழங்கும்‌ முகாம்‌ நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு பணிகள்‌ குறித்து 17.08.2023 அன்று மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ திரு. கிராந்திகுமார்‌ பாடி இ.ஆ.ப., அவர்கள்‌ அனைத்து துறை அலுவலர்களுடன்‌ ஆய்வு மேற்கொண்டார்‌. அருகில்‌ பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்‌ திரு.கு.சண்முகசுந்தரம்‌, கோவை தெற்கு வருவாய்‌ கோட்டாட்சியர்‌ திரு.பண்டரிநாதன்‌ கலந்து கொண்டனர்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

சுதந்திர தினத்தினை முன்னிட்டு வ.உ.சி மைதானத்தில் நடைபெறவுள்ள சுதந்திர தினவிழா 2023 -ல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த உள்ளார்

வெளியிடப்பட்ட நாள்: 13/08/2023

சுதந்திர தினத்தினை முன்னிட்டு வ.உ.சி மைதானத்தில் நடைபெறவுள்ள சுதந்திர தினவிழா 2023 -ல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த உள்ளார்.(PDF 70KB)

மேலும் பல