Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

கோயம்புத்தூர் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026

2026–2027-ஆம் கல்வியாண்டிற்காக கோயம்புத்தூர் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில், முழுமையாக தற்காலிக அடிப்படையிலும் தொகுப்பூதிய முறையிலும் உதவிப்பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 57KB)

மேலும் பல

கோயம்புத்தூர் அரசு சட்டக் கல்லூரியில் உச்சநீதிமன்ற நீதியரசர், மாநில அமைச்சர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்

வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026

கோயமுத்தூர் மாவட்டம், அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதியரசர் திருமதி.வெ.மோகனா அவர்கள் மற்றும் மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு, மாணாக்கர்களுக்கு பட்டங்களை வழங்கினார்கள். (PDF 73KB)

மேலும் பல

கோயம்புத்தூரில் சமூக பாதுகாப்புத் திட்டங்கள் செயல்பாடு குறித்து இயக்குநர் காயத்ரி கிருஷ்ணன், இ.ஆ.ப., ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026

கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக பாதுகாப்புத் திட்ட இயக்குநர் திருமதி.காயத்ரி கிருஷ்ணன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், சமூக பாதுகாப்புத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் இன்று (03.07.2026) நடைபெற்றது. (PDF 65KB)  

மேலும் பல

மலுமிச்சம்பட்டியில் ரூ.3 கோடி மதிப்பிலான விளையாட்டு மைதானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026

கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், மலுமிச்சம்பட்டி ஊராட்சி, அம்பேத்கர் நகர் பகுதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் விளையாட்டு மைதான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 63KB)

மேலும் பல

கணியூரில் “கோவை ஊரக வனம் – ஊராட்சிகளின் சங்கமம்” திட்டத்தை மரக்கன்று நட்டு தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் ஊராட்சி ஒன்றியம், கணியூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., கலந்து கொண்டு, “கோவை ஊரக வனம் – ஊராட்சிகளின் சங்கமம்” என்ற திட்டத்தை மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். (PDF  174KB)

மேலும் பல

மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை தேதி ஜூலை 31 வரை நீட்டிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் ரோடு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரில் இயங்கி வரும் மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவியர்கள் சேர,  நேரடி சேர்க்கை 15.06.2026 முதல் 30.06.2026 வரை மேற்கொள்ளப்பட்டது தற்போது 31.07.2026 வரை  சேர்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. (PDF 237KB)

மேலும் பல

அமைச்சர் தலைமையில் கோயம்புத்தூரில் சமூக நீதி விடுதி மாணவர் சேர்க்கை தேர்வுக்குழுக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026

கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாண்புமிகு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திருமதி.செ.கமலி அவர்கள் தலைமையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின்கீழ், செயல்படும் சமூக நீதி விடுதிகளில் நடப்பு கல்வியாண்டில் (2026 – 2027) மாணாக்கர் சேர்க்கை தொடர்பான தேர்வுக்குழுக் கூட்டம் இன்று (02.07.2026) நடைபெற்றது. (PDF 121KB)

மேலும் பல

கோயம்புத்தூரில் விடுதி மாணவர்களுக்கான புகார் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகளை தெரிவிக்க வாட்ஸ்அப் உதவி எண் 9445477016 தொடக்கம்

வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியர்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், விடுதி நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான குறைகள் உள்ளிட்ட புகார்களை எந்நேரமும் தெரிவிக்க 9445477016 என்ற வாட்ஸ்அப் எண் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், புகார் அளிக்கும் மாணவர்களின் விவரங்கள் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும், புகாரின் விவரங்கள் மட்டுமே விசாரணை செய்யப்படும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், […]

மேலும் பல

கோயம்புத்தூரில் 9-வது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி பணி ஜூலை 1 முதல் தொடக்கம்

வெளியிடப்பட்ட நாள்: 29/06/2026

தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10, 2026 வரை 9-வது சுற்று கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அனைத்து கிராமங்களிலும் உள்ள பசுக்கள், எருமைகள், எருதுகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளுக்கு தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப. கேட்டுக்கொண்டுள்ளார். […]

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29-06-2026

வெளியிடப்பட்ட நாள்: 29/06/2026

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (29.06.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ச.மதுராந்தகி அவர்கள் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். (PDF 221KB)

மேலும் பல