Close

பொள்ளாச்சி அரசு மருத்துமனையில் கோவிட்-19 சிகிச்சை முறைகள் மற்றும் தயார்நிலை குறித்த ஒத்திகை பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 11/04/2023
2023041273

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அரசு மருத்துமனையில் கோவிட்-19 சிகிச்சை முறைகள் மற்றும் தயார்நிலை குறித்த ஒத்திகை பயிற்சியினையும், பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சிதிட்டப் பணிகளையும் 11.04.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார்பாடி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்தஆய்வுகளின்போது, பொள்ளாச்சி நகராட்சித்தலைவர் திரு.சியாமளா நவநீதகிருஷ்ணன், மருத்துவமனை கண்காணிப்பாளர் திரு.கார்த்திகேயன் சூலேஸ்வரன்பட்டி பேரூராட்சித் தலைவர் திரு.சந்திரமோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லதா, ஜென்கின்ஸ், ஜமீன்கோட்டாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியம், ஆகியோர் உடனிருந்தனர்.  (PDF 75KB)