Close

மாவட்ட ஆட்சியரின் படிப்பிடை பயிற்சித் திட்டத்தின் கீழ் (District Collector’s Internship Programme) தேர்வு செய்யப்பட்டிருந்த மாணவர்கள் ஆய்வுகளின் முடிவுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் சமர்பித்தனர்

வெளியிடப்பட்ட தேதி : 04/04/2023
2023041034

மாவட்ட ஆட்சியரின் படிப்பிடை பயிற்சித் திட்டத்தின் கீழ் (District Collector’s Internship Programme) தேர்வு செய்யப்பட்டிருந்த மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தலைப்பின்கீழ் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகளை 04.04.2023 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் சமர்பித்தனர். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலாஅலெக்ஸ், மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கோகிலா, குமரகுரு பன்முக கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணைமுதல்வர் நஞ்சன்பால், ரோட்டரி டெக்ஸ்சிட்டி தலைவர் விஜய் ராமசந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். (PDF 320KB)