26.08.2026 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் மதுபானக் கடைகள் மூடல்
வெளியிடப்பட்ட தேதி : 24/08/2026
மீலாடி நபி தினத்தை முன்னிட்டு, 26.08.2026 (புதன்கிழமை) அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் உள்ளிட்ட அனைத்து மதுபான உரிமத்தளங்களும் Dry Day ஆக அறிவிக்கப்பட்டு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அன்றைய தினம் விதிமுறைகளை மீறி மதுபானம் விற்பனை செய்தல், சட்டவிரோதமாக பதுக்கி வைத்தல் அல்லது ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம், 1937-ன் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.