போட்டித் தேர்வு பயிற்றுநர்கள் தேவை – விண்ணப்பிக்க அழைப்பு
கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் TNPSC, TNUSRB, TRB, TET, SSC, RRB, IBPS உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இப்பயிற்சி வகுப்புகளை நடத்த தகுதியும் அனுபவமும் உள்ள பயிற்றுநர்கள் தேவைப்படுகின்றனர். பயிற்றுநர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.800 மதிப்பூதியம் வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் தங்களது சுயவிவரக் குறிப்புடன் 07.09.2026க்குள் துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம், G.N. மில்ஸ், கோவை–29 என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0422-2642388 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.