தேர்தல் காரணமாக திங்கள்கிழமை குறைதீர்க்கும் நாள் கூட்டமானது நிறுத்தி வைக்கப்படுகிறது.
வெளியிடப்பட்ட தேதி : 15/03/2026
இந்திய தேர்தல் ஆணையத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டு 15.03.2026 இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஆகையால் தமிழ்நாடு அரசின் முதல்வரின் முகவரித்துறையின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிரதி வாரம் திங்கள்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறவேண்டி மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடத்தப்படும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது, இந்திய தேர்தல் ஆணையத்தினால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப்பெறப்படுவது தொடர்பான மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. (PDF 219KB)