கோவை வ.உ.சி. மைதானத்தில் அரசுப் பொருட்காட்சியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
வெளியிடப்பட்ட தேதி : 11/06/2026
கோயம்புத்தூர் மாவட்டம், வ.உ.சி. மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரசுப் பொருட்காட்சியினை மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வி.சம்பத் குமார் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்து, பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டு, அரசுத்துறைகளின் சார்பில் 459 பயனாளிகளுக்கு ரூ.3.92 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 258KB)
