Close

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் முதலமைச்சரின் இரண்டுபெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு வைப்புநிதிப் பத்திரங்களை மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 11/07/2024

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 11.07.2024 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் முதலமைச்சரின் இரண்டுபெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு வைப்புநிதிப் பத்திரங்களை மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி.ப.ராஜ்குமார் (கோயம்புத்தூர்), திரு.கே.ஈஸ்வரசாமி (பொள்ளாச்சி), மாநகராட்சி ஆணையாளர் திரு.சிவகுருபிரபாகரன் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மோ.ஷர்மிளா, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திருமதி.ஸ்வேதாசுமன் இ.ஆ.ப., உதவி ஆட்சியர்(பயிற்சி) திரு.அங்கத் குமார் ஜெயின் இ.ஆ.ப., மண்டலக்குழு தலைவர்கள் திருமதி.மீனாலோகு, திருமதி.தெய்வயானை தமிழ்மறை, பணிகள் குழுத் தலைவர் திருமதி.சாந்திமுருகன், மாமன்ற உறுப்பினர் திருமதி.சுமா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி.மு.கோகிலா, மாவட்ட சமூகநல அலுவலர் திருமதி.அம்பிகா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.(PDF 80KB)

2024071213-scaled