“போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” விழிப்புணர்வு: கோயம்புத்தூரில் கல்லூரி மாணவர்களின் மனித சங்கிலி நிகழ்வு
வெளியிடப்பட்ட தேதி : 12/08/2026
கோயம்புத்தூர் மாவட்டம், ரேஸ்கோர்ஸ் மீடியா டவர் பகுதியில், “போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற இலக்கை வலியுறுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்வினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் இன்று (12.08.2026) துவக்கி வைத்தார்.
