“போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” விழிப்புணர்வு: கோயம்புத்தூரில் மாணவர்களின் போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி
வெளியிடப்பட்ட தேதி : 14/08/2026
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் “போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிராக மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் இன்று (14.08.2026) கொடியசைத்து துவக்கி வைத்தார்.