போதைப் பொருள் தடுப்பு மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 24/06/2024

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 24.06.2024 அன்று போதைப் பொருள் தடுப்பு மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.பத்ரிநாராயணன் இ.கா.ப., உதவி ஆட்சியர்(பயிற்சி) திரு.அங்கத் குமார் ஜெயின் இ.ஆ.ப., மாநகர காவல் துணை ஆணையர் டாக்டர்.செந்தில்குமார், துணை ஆணையர்(கலால்) திரு.எஸ்.ஜெயசந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் திரு.பண்டரிநாதன், திரு.கோவிந்தன், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு.தமிழ்செல்வன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.(PDF 250KB)