ரூ.1.55 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்களை மாண்புமிகு அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
வெளியிடப்பட்ட தேதி : 05/09/2026
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் மொத்தம் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்களை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத்குமார் அவர்கள், மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. க. விக்னேஷ் அவர்கள் முன்னிலையில், இன்று (05.09.2026) பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இதில், பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.55.50 இலட்சம் மதிப்பில் புதிய சித்த மருத்துவ வெளிநோயாளிகள் பகுதி, ஆலம்பாளையம் மற்றும் ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் தலா ரூ.35.93 இலட்சம் மதிப்பில் தலா 2 கூடுதல் வகுப்பறைகள், எஸ்.நல்லூர் ஊராட்சியில் ரூ.28.01 இலட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம் ஆகியவை அடங்கும்.



