80வது சுதந்திர தின விழா: கோயம்புத்தூரில் தேசியக் கொடியேற்றி தியாகிகளின் வாரிசுதாரர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கௌரவித்தார்
வெளியிடப்பட்ட தேதி : 15/08/2026
கோயம்புத்தூர் மாவட்டம், வ.உ.சிமைதானத்தில் இன்று (15.08.2026) நடைபெற்ற சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, மூவர்ண பலூன்களையும் மற்றும் சமாதானப்புறாக்களையும் பறக்கவிட்டார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கும், மொழி போராட்ட தியாகிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.


