முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 16/08/2022கோயப்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 16.08.2022 அன்று முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தின் சார்பில் நடைபெற்ற மாவட்ட முப்படைவீரர் வாரியத்தின் 60-வது ஆண்டு கூட்டத்தில் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆபட, அவர்கள் வழங்கினார்.
மேலும் பலபெரியநாயக்கன்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணியினை துரிதப்படுத்துவதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 16/08/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறையின் மூலம் நடைபெற்று வரும் மேம்பாலப் பணியினை துரிதப்படுத்துவதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப., அவர்களின் தலைமையில் அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் 16.08.2022 அன்று நடைபெற்றது. (PDF 402KB)
மேலும் பலசூலூர் ஊராட்சி ஒன்றியம், கிட்டாம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 15/08/2022சுதந்திர தினத்தினை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் ஊராட்சி ஒன்றியம், கிட்டாம்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் 15.08.2022 அன்று நடைபெற்றது. இக்கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். (PDF 46.8KB)
மேலும் பலஇந்திய திருநாட்டின் சுதந்திர தின விழாவினை முன்னிட்டு வஉசி மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
வெளியிடப்பட்ட நாள்: 15/08/2022கோயம்புத்தூர் மாவட்டம், வ.உ.சி மைதானத்தில் 15.08.2022 அன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, வண்ண பலூன்களை வானில் பறக்கவிட்டார். (PDF 34KB)
மேலும் பலபெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2022கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பலகோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நகராட்சி நிர்வாக வளர்ச்சித் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2022கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் 13.08.2022 அன்று கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நகராட்சி நிர்வாகத்துறை வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தலைமையில், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 398KB)
மேலும் பல75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
வெளியிடப்பட்ட நாள்: 13/08/202275-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு இன்று 13.08.2022 கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2022கோயம்புத்தூர் மாவட்டம், வ.உசி மைதானத்தில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை 12.08.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் உணவு திருவிழா நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2022கோயம்புத்தூர் மாவட்டம், நவஇந்தியா, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி கலையரங்கில் நடத்திய உகந்த உணவு திருவிழா நிகழ்ச்சியினை 12.08.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப, அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 55KB)
மேலும் பலகுழாய் வெடிப்பு அல்லது எரிவாயு கசிவு சம்பவம் எதுவும் இல்லை என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது – பத்திரிக்கைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 11/08/202211.08.2022 அன்று தண்ணீர்பந்தல் சாலையில் நடந்த இந்தச் சம்பவம், குழாயில் இருந்து மேம்படுத்தப்பட்ட சேறு மற்றும் அசுத்தங்களை அகற்றுவதன் ஒரு பகுதியாகும். மேலும் காற்று மற்றும் நீர் மட்டுமே வெளியிடப்பட்டது, எனவே பீதி அடைய ஒன்றுமில்லை. IOC இன் முதன்மையான முன்னுரிமை பாதுகாப்பு. இது எஃகு குழாய்களின் பொறியியல் மற்றும் சோதனையின் ஒரு பகுதியாகும். மேலும் குழாய் வெடிப்பு அல்லது எரிவாயு கசிவு சம்பவம் எதுவும் இல்லை என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. (PDF 93KB)
மேலும் பல