நகர நிலவரித்திட்டத்தின் கீழ் பட்டா பெற்றுக் கொள்வதற்கான இறுதி வாய்ப்பு -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 07/05/2022கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்-(AB)28-க்குட்பட்ட பிளாக் 1 முதல் 20 வரையிலான பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் கோயம்புத்தூர் (தெற்கு) நகர நிலவரித்திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பட்டா பெற பதிவு தபால் மூலம் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளபடுகிறார்கள் -பத்திரிகைச் செய்தி
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின்படி ‘சவர்மா’ தயாரிக்கும் உணவகங்களில் இரண்டாம் நாளாக ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 07/05/2022கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்ட நியமன அலுவலர் மரு.கு.தமிழ்செல்வன் அவர்களது தலைமையில் கோவை மாநகரில் கோவைப்புதூர், கணபதி, புலியகுளம், இராமநாதபுரம், வடவள்ளி, அவினாசி ரோடு, பீளமேடு, சூலூர், மலுமிச்சம்பட்டி மற்றும் பாப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் ‘சவர்மா’ தயாரிக்கும் உணவகங்களில் இரண்டாம் நாளாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. (PDF 311KB)
மேலும் பலவேளாண் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மதுக்கரை வட்டாரம் சீராப்பாளையம் பகுதிகளில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 07/05/2022கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை வட்டாரம் சீராப்பாளையம் பகுதிகளில் வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்,இ.ஆ.ப அவர்கள் செய்தியாளர் பயணத்தின் போது ஆய்வு மேற்கொண்டு சீராப்பாளையம் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்திற்கு உழவு இயந்திரங்களை வழங்கினார் மற்றும் வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை 07.05.2022 அன்று நட்டு வைத்தார். (PDF 57KB)
மேலும் பலவேலைவாய்ப்பற்ற பழங்குடியின மக்களுக்கு அரசு பொது தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 07/05/2022கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைகட்டி பகுதியில் வசித்து வரும் வேலைவாய்ப்பற்ற பழங்குடியின மக்கள் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியில் சேர்வதை ஊக்குவிக்கும் பொருட்டு TNPSC, SSC, Railway, TRB ஆகிய தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 06.05.2022 அன்று துவக்கி வைத்தார். (PDF 32KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின்படி ‘சவர்மா’ தயாரிக்கும் உணவகங்களில் திடீர் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
வெளியிடப்பட்ட நாள்: 06/05/2022தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் அவர்களின் உத்தரவின்படியும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் கோவை மாவட்டத்தில் உள்ள் ‘சவர்மா’ தயாரித்து விற்பனை செய்யும் உணவகங்கள் கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் மரு.கு.தமிழ்செல்வன் அவர்களது தலைமையில் 05.05.2022 அன்று திடீர் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. (PDF 30KB)
மேலும் பலமாண்புமிகு ஊரக தொழில்துறை அமைச்சர் உக்கடம் குடிசை மாற்றுவாரிய திட்டப்பகுதி குடிருப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2022கோயம்புத்தூர் மாநகராட்சி உக்கடம் குடிசை மாற்றுவாரிய திட்டப்பகுதி, டோபிகாலனி உள்ளிட்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் மாண்புமிகு ஊரக தொழில்துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் 05.05.2022 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் , மாநகராட்சி துணை ஆணையர் திருமதி. ஷர்மிளா அவர்கள் மற்றும் வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர். (PDF 42KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2022கோயம்புத்தூர் மாவட்டம் எஸ்.எஸ்.குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 05.05.2022 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பலகோயம்புத்தூர் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டத்திற்காக கூட்டுக் கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 04/05/2022கோயம்புத்தூர் மாவட்டம் பரம்பிக்குளம் ஆழியாறு கால்வாயினை ஒட்டியுள்ள தடை செய்யப்பட்ட எல்லையிலிருந்து வணிக நோக்கத்திற்காக தண்ணீர் எடுப்பதை தடுக்க கூட்டுக் கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது -பத்திரிகைச் செய்தி (PDF 346KB)
மேலும் பலவேளாண் பயன்பாட்டிற்காக வண்டல் மண் வெட்டி எடுத்துகொள்ளும் ஏரி/குட்டை/குளங்களின் அட்டவணை வெளியிடு -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 04/05/2022கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏரி/குட்டை/குளங்களில் படிந்துள்ள வண்டல் மண் போன்ற கனிமங்களை வேளாண் நோக்கத்திற்காக வெட்டி எடுத்துச் செல்ல ஏரி/குட்டை/குளங்களின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது -பத்திரிகைச் செய்தி (PDF 683KB)
மேலும் பலதிருக்குறள் குறளோவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு காசோலை மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 02/05/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் நடைபெற்ற திருக்குறள் குறளோவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு காசோலை மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 02.05.2022 அன்று வழங்கினார். (PDF 31KB)
மேலும் பல