Close

GDP PHOTO

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் 04.04.2022 அன்று நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 04/04/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 04.04.2022 அன்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தில் சேருவதற்கான உறுப்பினர் அட்டைகளையும், திருமண நிதியுதவி தொகைக்கான காசோலைகள் மற்றும் தங்க நாணயங்களையும் பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். மேலும் புவனேஸ்வரில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி 19.04.2022 அன்று நடைபெறும் -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 04/04/2022

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இராசவீதி துணிவணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் கூட்ட அரங்கில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் 19.04.2022 அன்று தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில் நடத்தப்பட உள்ளன -பத்திரிகைச் செய்தி (PDF 47.2KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ‘நேரடி கலந்தாய்வு அமர்வு’ 05.04.2022 அன்று நடைபெறும் -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 04/04/2022

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ‘நேரடி கலந்தாய்வு அமர்வு’ (Open House Session) 05.04.2022 அன்று வாரியத்தின் அனைத்து அலுவலகங்களிலும் நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார் -பத்திரிகைச் செய்தி (PDF 48KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை மற்றும் சூலூர் வட்டங்களில் பாலாறு பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கு தேர்தல் அட்டவணை அறிவிப்பு -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 02/04/2022

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை மற்றும் சூலூர் வட்டங்களிலுள்ள பாலாறு பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் ஆட்சிமண்டலத் தொகுதிகளின் உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் அட்டவணை அறிவிப்பு -பத்திரிகைச் செய்தி. (PDF 418KB)

மேலும் பல
TRANSGENDER SEWING MACHINE

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இலவச தையல் பயிற்சி வகுப்பை நிறைவு பெற்ற திருநங்கையர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் தையல் இயந்திரங்களை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2022

கோயம்புத்தூர் நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் இலவச தையல் பயிற்சி வகுப்பை நிறைவு பெற்ற திருநங்கையர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் சான்றிதழ்கள் மற்றும் தையல் இயந்திரங்களை வழங்கினார்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

சர்வதேச திருநங்கைகள் தினம் 31.03.2022 அன்று நடைபெற்றது -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2022

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் சமூக நலத்துறை சார்பில் சர்வதேச திருநங்கைகள் தினம் 31.03.2022 அன்று கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது -பத்திரிகைச் செய்தி (PDF 231KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்படும் தனியார் தொலைக்காட்சி அலை வரிசை எண்கள் வெளியிடப்பட்டுள்ளன -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2022

போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்படும் தனியார் தொலைக்காட்சி அலை வரிசை எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இக்கல்வி தொலைக்காட்சியின் மூலம் மாணவ, மாணவியர்கள் தேர்வுகளுக்கான பயிற்சியினை மேற்கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார் -பத்திரிகைச் செய்தி (PDF 41.9KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு TNPSC GROUP-IV தேர்விற்கான அறிமுக பயிற்சி வகுப்புகள் 04.04.2022 அன்று நடைபெறும் -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2022

தமிழ்நாடு TNPSC GROUP-IV தேர்விற்கான அறிமுக பயிற்சி வகுப்புகள் 04.04.2022 அன்று கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் -பத்திரிகைச் செய்தி (PDF 43.2KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNUSRB) நடத்தப்படும் தேர்விற்கான அறிமுக பயிற்சி வகுப்புகள் 04.04.2022 அன்று நடைபெறும் -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2022

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNUSRB) நடத்தப்படும் தேர்விற்கான அறிமுக பயிற்சி வகுப்புகள் 04.04.2022 அன்று கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும். மேலும், தன்னார்வ பயிலும் வட்டம் முலம் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் மாதத்திலிருந்து வார இறுதி நாட்களில் துவங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது -பத்திரிகைச் செய்தி (PDF 45.3KB)

மேலும் பல
PHOTO EXHIBITION

தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் மாண்புமிகு மாநகராட்சி மேயர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டனர்

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2022

கோயம்புத்தூர் மாவட்டம் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் மற்றும் மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி. கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் ஆகியோர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டனர்.

மேலும் பல