தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் 24.06.2022 அன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் முனைவர்.இரா.நந்தகோபால் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 24.06.2022 அன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் மற்றும் பல அரசு அலுவலர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். (PDF 51KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் 24.06.2022 அன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் 24.06.2022 அன்று நடைபெற்றது. (PDF 59KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஒருங்கிணைந்த பல்நோக்கு விளையாட்டு மைதானத்தை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 23/06/2022கோயம்புத்தூர் ராமகிருஷ்ணா மிஷன் கல்வி மற்றும் ஆராய்ச்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பல்நோக்கு விளையாட்டு மைதானத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் 23.06.2022 அன்று துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.
மேலும் பலகோவை மத்தியசிறையில் இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 23/06/2022கோவை மத்தியசிறையில் காலியாகவுள்ள ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்க்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன -பத்திரிகைச் செய்தி (PDF 817KB)
மேலும் பலநகர நிலவரித்திட்டத்தின் கீழ் பட்டா பெற்றுக் கொள்வதற்கான இறுதி வாய்ப்பு -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 23/06/2022கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்-O(15)-க்குட்பட்ட பிளாக் 1 முதல் 40 வரையிலான பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் கோயம்புத்தூர் (வடக்கு) நகர நிலவரித்திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பட்டா பெற உரிய ஆவணங்கள் மூலம் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளபடுகிறார்கள் -பத்திரிகைச் செய்தி (PDF 1123KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோவை புத்தகத் திருவிழா 2022க்கான இலட்சினையை வெளியிட்டார்
வெளியிடப்பட்ட நாள்: 22/06/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கோவை புத்தகத் திருவிழா 2022க்கான இலட்சினையை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் 22.06.2022 அன்று வெளியிட்டார்கள். (PDF 46KB)
மேலும் பலமாவட்டஆட்சித்தலைவர் அவர்கள் அவினாசி சாலையில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதை நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 22/06/2022கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம் அவினாசி சாலையில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் 22.06.2022 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 49KB)
மேலும் பலமாவட்டஆட்சித்தலைவர் அவர்கள் கிணத்துக்கடவு கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையங்களில் நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 22/06/2022கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையங்களில் மாவட்டஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 52KB)
மேலும் பலதேசிய அளவில் “Eat Right Challenge” போட்டியில் வெற்றி பெற்றதற்காக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் வழங்கிய சான்றிதழை கோவை மாவட்ட நியமன அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
வெளியிடப்பட்ட நாள்: 21/06/2022தேசிய அளவில் “Eat Right Challenge” போட்டியில் தேசிய அளவில் 12-வது இடமும், தமிழக அளவில் 4-வது இடத்தையும் கோயம்புத்தூர் மாவட்டம் பெற்றதற்காக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கோவை மாவட்ட நியமன அலுவலர் மரு.கு.தமிழ்செல்வன் அவர்களை பாராட்டி வழங்கிய சான்றிதழை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். (PDF 241KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மாற்றுத்திறனுள்ள குழந்தைகளை பார்வையிட்டு நலன் விசாரித்தார்
வெளியிடப்பட்ட நாள்: 21/06/2022கோயம்புத்தூரில் உள்ள கங்கா மருத்துவமனையில் ஊனமுற்ற மற்றும் மாற்றுத்திறனுள்ள குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கும் திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 20.06.2022 அன்று பார்வையிட்டு நலன் குறித்து விசாரித்தார்கள். (PDF 45KB)
மேலும் பல