Close

படங்கள் ஏதும்  இல்லை

HCL-Tech Bee நிறுவனத்தின் வேலைவாய்ப்பு முகாம் -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 31/05/2022

HCL-Tech Bee நிறுவனத்தின் வேலைவாய்ப்பு முகாம் கோவை ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 03.06.2022 முதல் 05.06.2022 வரை நடைபெற உள்ளது. கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்ட மாணவர்கள் பங்கு பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள் -பத்திரிகைச் செய்தி (PDF 151KB)

மேலும் பல
MAY 31 B-AGRI GDP

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் 31.05.2022 அன்று நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 31/05/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் 31.05.2022 அன்று நடைபெற்றது. (PDF 202KB)

மேலும் பல
Collector - Appricate IAS Rank holders

அகில இந்திய குடிமைப்பணிகள்(UPSC) தேர்வில் தேர்ச்சி பெற்ற கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வாழ்த்து

வெளியிடப்பட்ட நாள்: 31/05/2022

அகில இந்திய குடிமைப்பணிகள் (UPSC) தேர்வில் தேர்ச்சி பெற்ற கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 31.05.2022 அன்று புத்தகம் வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மேலும் பல
WORLD TOBACCO DAY - RALLY

உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 31/05/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 31.05.2022 அன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் பல
Collector Honoured - athlet Student

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற பன்னாட்டு அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற வீராங்கனைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வாழ்த்து

வெளியிடப்பட்ட நாள்: 30/05/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற பன்னாட்டு அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவி வி.திவ்யஸ்ரீ மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்களிடம் 30.05.2022 அன்று வாழ்த்து பெற்றார்.

மேலும் பல
Health Minister Meeting

இந்திய தொழில் கூட்டமைப்புக்களுடனான ஆலோசனை கூட்டம் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 30/05/2022

இந்திய தொழில் கூட்டமைப்புக்களுடனான (CII) ஆலோசனை கூட்டம் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V.செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் 30.05.2022 அன்று கோயம்புத்தூர் ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது. (PDF 392KB)

மேலும் பல
Health Minister Inspection Photo

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பன்னடுக்கு மருத்துவமனை கட்டடப் பணிகளை நேரில் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 30/05/2022

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V.செந்தில்பாலாஜிஅவர்கள் ஆகியோர் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.110.89 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் பன்னடுக்கு மருத்துவமனை கட்டடப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். (PDF 415KB)

மேலும் பல
GDP 30.05.2022

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் 30.05.2022 அன்று நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 30/05/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 30.05.2022 அன்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF 205KB)

மேலும் பல
Govt Exhibition

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசுப்பொருட்காட்சி-2022 ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 30/05/2022

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசுப்பொருட்காட்சி-2022 நடத்தப்படுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் 30.05.2022 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. (PDF 125KB)

மேலும் பல
KALIGNAR STATUE UNVEILING

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நேரடி ஒளிபரப்பு

வெளியிடப்பட்ட நாள்: 28/05/2022

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி காந்திபுரம் பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வீடுயோ வாகனத்தின் மூலம் 28.05.2022 அன்று நேரடியாக ஒளிபரப்பட்டது.

மேலும் பல