கோயம்புத்தூர் மாவட்டத்தில் இளைஞர் நீதிக்குழுமத்தின் சமூக நல உறுப்பினர்களுக்கான பதவிகள் |
அறிவிப்பு:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இளைஞர் நீதிக்குழுமத்தின் சமூக நல உறுப்பினர்களுக்கான பதவிகள் நிரப்புவது குறித்து
பொருள்:
2015-ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதிக்குழுமத்திற்கு சமூக நல உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிட்டுள்ள தகுதிகளை கொண்ட நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளைஞர் நீதிக்குழுமத்திற்கு ஒரு பெண் உட்பட 2 சமூக நல உறுப்பினர்கள்; மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.
குழந்தைகள் தொடர்பான உடல்நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல், மனநலம் மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குழுமத்தில் அதிகபட்சமாக ஒரு நபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர்களாவர். ஆனால் தொடர்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது.
இதற்கான விண்ணப்ப படிவத்தை கீழ்க்காணும் முகவரியில் அல்லது கோயம்புத்தூர் மாவட்ட இணைய தளம் ( https://coimbatore.nic.in) என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 16.12.2021 அன்று மாலை 5.45 மணிக்குள் கீழ்கண்ட முகவரியில் கிடைக்கப் பெறுமாறு அனுப்பிவைத்திட தெரிவிக்கப்படுகிறது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
2வது தளம், பழைய கட்டிடம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
கோயம்புத்தூர் – 641 018.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.
|
29/11/2021 |
16/12/2021 |
பார்க்க (2 MB) |