Close

கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான பதவிகள் நிரப்புவது குறித்து.

கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான பதவிகள் நிரப்புவது குறித்து.
தலைப்பு விவரம் தொடங்கும் தேதி முடிவுறும் தேதி கோப்பு
கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான பதவிகள் நிரப்புவது குறித்து.

2015-ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நல குழுக்களுக்கு தலைவர் (ம) உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிட்டுள்ள தகுதிகளை கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குழந்தைகள் நல குழுவிற்கு ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.

குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித நல மருத்துவம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் சுகாதாரம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநலம் மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூகப்பணி அல்லது சமூகவியல் அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் நியமனம் செய்யப்படும்போது 35 வயதுக்கு குறையாதவராகவும்  65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சமாக ஒரு நபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர்களாவர். ஆனால் தொடர்;ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது. ஒரு நபர் ஒரு மாவட்டத்தின் குழந்தை பராமரிப்பு நிறுவனத்தின் நிர்வாகத்தில் இருந்தால் அவர் குழந்தை நலக்குழு தலைவர் அல்லது உறுப்பினருக்கு நியமிக்க தகுதியற்றவர் ஆவார்.

இறுதி தேதி : 15.09.2021 மாலை 5.00 மணி

28/07/2021 15/09/2021 பார்க்க (2 MB)