Close

ஆழியார் அணை

அழகிய இயற்கை காட்சிகள் கொண்ட மலைகளால் சூழப்பட்ட அழகிய அணை ஆழியார் அணை. பொள்ளாச்சி மற்றும் வால்பாறைக்கு இடையே அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து 64 கி.மீ , பொள்ளாச்சியிலிருந்து 24 கி.மீ மற்றும் சென்னை நகரிலிருந்து 545 கி.மீ தொலைவிலும் உள்ளது.

1959 முதல் 1969 வரையான காலப்பகுதியில் ஆழியார் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது, அணைக்கு முதன்மையான நோக்கம் வேளாண்மை மேம்படுத்தும் நோக்கத்திற்காக பொள்ளாச்சி மற்றும் அருகிலுள்ள இடங்களுக்கு பாசனத்திற்கு ஆதரதிற்கும் ஆகும். அணை உயரம் 81 மீட்டர். அணையின் கீழே ஒரு நன்கு பராமரிக்கப்படும் பூங்கா உள்ளது. நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள அனமலை கண்களுக்கு ஒரு விருந்து, படகு சவாரி இங்கே இருக்கிறது.

இது பொள்ளாச்சியிலிருந்து சாலைவழி மூலம் இணைக்கப்பட்டுள்ளது. வால்பாறை பார்வையிடும் பெரும்பாலான மக்கள் ஆழியார் அணைக்கு பயணம் செய்கிறார்கள்.

புகைப்பட தொகுப்பு

  • ஆழியார் அணை
  • ஆழியார் அணை நீர் வெளியேற்றம்
  • படகு சவாரி

அடைவது எப்படி:

வான் வழியாக

அருகிலுள்ள விமான நிலையம் கோயம்புத்தூர் விமான நிலையம் , ஆழியார் அணையிலிருந்து 64 கி.மீ தூரத்தில் உள்ளது.

தொடர்வண்டி வழியாக

அருகிலுள்ள இரயில் நிலையம் பொள்ளாச்சி ரயில் நிலையம் இது ஆழியார் அணைவிலிருந்து 24 கி.மீ தொலைவில் உள்ளது . முக்கிய இரயில் நிலையம் கோயம்புத்தூர் ரயில்வே சந்திப்பாகும். இது 64 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

சாலை வழியாக

ஆழியார் அணையிலிருந்து 24 கி.மீ தொலைவில் பொள்ளாச்சி பேருந்து நிலையம் உள்ளது , 64 கி.மீ. தொலைவில் கோயம்புத்தூர் நகர் அமைந்துள்ளது