• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

உப்பிலிபாளையம் மற்றும் சௌரிபாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடுகளை இடித்து விட்டு மறுகட்டுமானம் செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 12/03/2023

கோயம்புத்தூர் மாவட்டம் உப்பிலிபாளையம் மற்றும் சௌரிபாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகளை இடித்து விட்டு மறுகட்டுமானம் செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் 12.03.2023 அன்று மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேற்பார்வை பொறியாளர் கே.இரவிச்சந்திரன் செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் எஸ்.அன்புமணி செயற்பொறியாளர் கே.ஏ.பெரியசாமி உப்பிலிபாளையம் திட்டம் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை குழு மற்றும் சௌரிபாளையம் குடியிருப்போர் நலச் சங்கம் தலைவர் செயலாளர் கலந்துகொண்டனர். (PDF 320KB)

20230314783