உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் மரக்கன்றுகள் நட்டுவைத்தார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 08/03/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக மகளிர் அலுவலர்கள் 08.03.2022 அன்று மரக்கன்றுகளை நட்டுவைத்தார்கள். மற்றும் மாநகர காவல் ஆணையாளர் திரு.பிரதிப்குமார் இ.கா.ப. அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப. அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு. ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப. அவர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.