கோயம்புத்தூர், ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி கலையரங்கத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடனுதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 29/12/2022

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 29.12.2022 அன்று திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள், மணிமேகலை விருதுகள் மற்றும் மாநில அளவிலான வங்கியாளர் விருதுகளை வழங்கியதையடுத்து, கோயம்புத்தூர் மாவட்டம், ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி கலையரங்கத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடனுதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் செல்வம், மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் கௌசல்யா மற்றும் மகளிர் திட்ட அலுவலக பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.(PDF 46KB)