Close

கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள பொது பார்வையாளர்கள் அவர்கள் , காவல் பார்வையாளர் அவர்கள் ஆகியோர் தலைமையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 27/03/2024

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் 27.03.2024 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள பொது பார்வையாளர்களான டாக்டர்.வினோத் ஆர் ராவ் இ.ஆ.ப., அவர்கள்(கோயம்புத்தூர்), திரு.அனுராக் சவுத்ரி இ.ஆ.ப., அவர்கள் (பொள்ளாச்சி), காவல் பார்வையாளர் திரு.மனோஜ்குமார் இ.கா.ப. அவர்கள் ஆகியோர் தலைமையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., மாநகர காவல் ஆணையர் திரு.வெ.பாலகிருஷ்ணன் இ.கா.ப., பொள்ளாச்சி நாடாமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மோ.ஷர்மிளா, மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திருமதி.ஸ்வேதா சுமன் இ.ஆ.ப., மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.(PDF 240KB)

2024032798-scaled

2024032798-scaled