Close

மாண்புமிகு மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்துறை அமைச்சர்‌ அவர்கள்‌ தலைமையில்‌ மானிய கோரிக்கையில்‌ அறிவிக்க வேண்டிய திட்டங்கள்‌ குறித்து மருத்துவ வல்லுநர்கள்‌ தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளுடனான ஆலோசனைகூட்டம்‌ நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 17/02/2023

மாண்புமிகு மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்துறை அமைச்சர்‌ திரு.மா.சுப்பிரமணியன்‌ அவர்கள்‌ தலைமையில்‌ மானிய கோரிக்கையில்‌ அறிவிக்க வேண்டிய திட்டங்கள்‌ குறித்து மருத்துவ வல்லுநர்கள்‌ தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளுடனான ஆலோசனைகூட்டம்‌ நடைபெற்றது. இக்கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலர் முனைவர்.ப.செந்தில்குமார் இ.ஆ.ப., தேசிய நலவாழ்வு இயக்குநர் திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஸ் இ.ஆ.ப., தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மரு. உமா இ.ஆ.ப., தமிழ்நாடு மருத்துவ சேவை கழக இயக்குநர் திரு.அரவிந்த் இ.ஆ.ப., மருத்துவ பணியாளர் தேர்வு கழக தலைவர் திரு.கிலாட்ஸன் புஷ்பராஜ் இ.ஆ.ப., இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் (பொ) திரு.மோகன் குமார், இ.ஆ.ப., பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் மரு.செல்வவிநாயகம், மருத்துவ கல்வி இயக்குநர் மரு.சாந்தி மலர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் மரு.ஹரி சுந்தரி, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நிர்மலா, இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரவீந்திரன், இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மரு.சந்திரா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.கு.அருணா, மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.(PDF 60KB)

health dept meeting17022023