Close

வருவாய்த்துறை அலுவலர்களுடனான பணி ஆய்வுக்‌ கூட்டம்‌ மாண்புமிகு வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்‌ துறை அமைச்சர்‌ அவர்கள்‌ தலைமையில்‌, மாண்புமிகு மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்‌ துறை அமைச்சர்‌ அவர்கள்‌ முன்னிலையில்‌ நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 19/01/2023
Revenue and EB Minister Review

கோயம்புத்தூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ 19.01.2023 அன்று வருவாய்த்துறை அலுவலர்களுடனான பணி ஆய்வுக்‌ கூட்டம்‌ மாண்புமிகு வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்‌ துறை அமைச்சர்‌ திரு.கே.கே.எஸ்‌.எஸ்‌.ஆர்‌.ராமச்சந்திரன்‌ அவர்கள்‌ தலைமையில்‌, மாண்புமிகு மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்‌ துறை அமைச்சர்‌ திரு. செந்தில்‌ பாலாஜி அவர்கள்‌ முன்னிலையில்‌ நடைபெற்றது. கூடுதல்‌ தலைமை செயலாளர்‌ வருவாய்‌ நிர்வாக ஆணையர்‌ திரு.எஸ்‌.கே.பிரபாகர்‌ இ.ஆ.ப, அருகில்‌ கூடுதல்‌ தலைமை செயலாளர்‌ /வருவாய்த்‌ துறை செயலாளர்‌ திரு. குமார்‌ ஜெயந்த்‌ இ.ஆ.ப, நில நிர்வாக ஆணையர்‌ திரு.எஸ்‌.நாகராஜன்‌ இ.ஆ.ப, சமூக பாதுகாப்புத்‌ திட்ட ஆணையர்‌
முனைவர்‌.வெங்கடாச்சலம்‌, இ.ஆ.ப, வருவாய்‌ நிர்வாக இணை ஆணையர்‌ திரு.ஜான்‌ லூயிஸ்‌, இ.ஆ.ப, மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன்‌ இ.ஆ.ப, மாண்புமிகு மாநகராட்சி மேயர்‌ திருமதி.கல்பனா ஆனந்தகுமார்‌, கூடுதல்‌ ஆட்சியர்‌ (வளர்ச்சி) டாக்டர்‌ அலர்‌ மேல்மங்கை இ.ஆ.ப, மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.ப்பி.எஸ்‌.லீலா அலெக்ஸ்‌ மாநகராட்சி துணை மேயர்‌ திரு. வெற்றிச்செல்வன்‌ உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்‌.