மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 20/04/2022கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் பெள்ளேபாளையம் ஊராட்சியில் 20.04.2022 அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் கலந்து கொண்டு பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 28KB)
மேலும் பலஉலக ஒவிய தினத்தை முன்னிட்டு சிறார்களுக்கான ஓவிய பயிற்சி முகாம் கோயம்பத்தூரில் நடைபெற்றது -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 20/04/2022தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் உலக ஒவிய தினத்தை முன்னிட்டு சிறார்களுக்கான ஓவிய பயிற்சி முகாம் கோயம்பத்தூரில் 17.04.2022 அன்று நடைபெற்றது -பத்திரிகைச் செய்தி (PDF 245KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ‘நான் முதல்வன்’ நேரலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 19/04/2022கோயம்புத்தூர் ஆர்.எஸ் புரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ‘நான் முதல்வன்’ நேரலை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 19.04.2022 அன்று பள்ளி மாணவியர்களுடன் கலந்துகொண்டார்.
மேலும் பலஉடல் உறுப்புதானம் செய்தவரின் தாய் மற்றும் உறவினர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்
வெளியிடப்பட்ட நாள்: 18/04/2022கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை முடிஸ் நகரைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்ததையடுத்து, அவருடைய உடல் உறுப்புகள் தானம் செய்ததையடுத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 18.04.2022 அன்று அவரது தாய் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் மற்றும் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஹரிஹரனின் உடலுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். (PDF 26KB)
மேலும் பலமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் 18.04.2022 அன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 18/04/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 18.04.2022 அன்று பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF 28.9KB)
மேலும் பலசுற்றுலாத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக பாரம்பரிய நடன ஓவிய புகைப்படங்களை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட நாள்: 17/04/2022கோயம்புத்தூர் விமான நிலையத்தில் சுற்றுலாத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக பாரம்பரிய நடன ஓவியங்களின் புகைப்படங்களை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர். மா.மதிவேந்தன் அவர்கள் 17.04.2022 அன்று திறந்து வைத்து பார்வையிட்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள், மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி. கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். (PDF 42.4KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம் கலந்துரையாடிய நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு
வெளியிடப்பட்ட நாள்: 16/04/2022மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஓராண்டில் 1,00,000 விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம் கலந்துரையாடிய நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பி.ஆர்.நடராஜன் அவர்கள் மற்றும் பலர் 16.04.2022 அன்று கோவை சரவணம்பட்டி கேஜிஐஎஸ்எல் கல்லூரி வளாகத்தில் பங்கேற்றனர்.
மேலும் பலஉலக ஹீமோபீலியா தின விழா நிகழ்ச்சி மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 16/04/2022கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நடைப்பெற்ற உலக ஹீமோபீலியா தின விழா நிகழ்ச்சி மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் 16.04.2022 அன்று நடைபெற்றது. (PDF 51.6KB)
மேலும் பலகோவை புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு சிறந்த இலச்சினையினை வடிவமைத்து தருபவருக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2022கோவை புத்தகத் திருவிழா கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு சிறந்த இலச்சினையினை (LOGO) வடிவமைத்து தருபவருக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 166KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தீவிர சிகிச்சைப்பிரிவு மருத்துவ கட்டமைப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 14/04/2022மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவு மருத்துவ கட்டமைப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக 14.04.2022 அன்று திறந்து வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கு.சண்முகசந்தரம் அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். (PDF 30.6KB)
மேலும் பல