மாநில அளவிலான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டு மற்றும் வாழ்த்து
வெளியிடப்பட்ட நாள்: 16/03/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில அளவிலான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்ற கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 16.03.2022 அன்று பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தார். (PDF 20.5KB)
மேலும் பலவக்ஃபு நிறுவன உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்
வெளியிடப்பட்ட நாள்: 16/03/2022கோயம்புத்தூர் மாவட்டத்தில் வக்ஃபு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் புதிய இருசக்கர வாகனம் வாங்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.(PDF 24.2KB)
மேலும் பலதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதிகளில் மாணவ மாணவியர் சேர்க்கை
வெளியிடப்பட்ட நாள்: 15/03/2022தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் உள்ள விளையாட்டு விடுதிகளில் சேர விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள மாணவ/மாணவியர் அதற்கான உரிய படிவங்களை சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் -பத்திரிகைச் செய்தி.(PDF 790KB)
மேலும் பலதேசிய நுகர்வோர் தின விழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 15/03/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் தேசிய நுகர்வோர் தின விழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் 15.03.2022 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ். லீலா அலெக்ஸ் அவர்கள், கூட்டுறவு சங்களின் இணைப்பதிவாளர் […]
மேலும் பலபரம்பிக்குளம் மற்றும் பவானிசாகர் அணைக்கோட்ட நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கு தேர்தல் அறிவிப்பு -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 14/03/2022பரம்பிக்குளம் மற்றும் பவானிசாகர் அணைக்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோயம்புத்தூர் மாவட்ட நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் ஆட்சிமண்டலத் தொகுதிகளின் உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் அறிவிப்பு -பத்திரிகைச் செய்தி.(PDF 259KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அவர்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு கேட்டு விண்ணப்பத்திருந்த பயனாளிக்கு அன்றே வீட்டினை உடனடியாக ஒதுக்கிடு செய்து ஆணை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 14/03/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 14.03.2022 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப. அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு கேட்டு விண்ணப்பத்திருந்த பயனாளியின், மாற்றுத்திறனாளி மகள் மற்றும் மகன் ஆகியோரது கல்வி மற்றும் சிகச்சையின் கருத்தில் கொண்டு, 14.03.2022 அன்று மனுசெய்த உடனயே மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப. அவர்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தரைத்தளத்தில் வீட்டினை […]
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கோவை மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் என்சிசி மாணவர்களுடன் கலந்துரையாடினார்
வெளியிடப்பட்ட நாள்: 10/03/2022மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் கோவை மாவட்டத்தின் என்சிசி மாணவர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுடன் 10.03.2022 அன்று கோயம்புத்தூரில் கலந்துரையாடினார். LT.கர்னல் சவுகான் – தளபதி, கேப்டன் அசோக்குமார், லெப்டினன்ட் ஆர்.பெருமாள், பறக்கும்படை அதிகாரி புருஷோத்தமன் மற்றும் கேப்டன் கவிதா ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 534KB)
மேலும் பலமாண்புமிகு தமிழக ஆளுநரை மாவட்ட வருவாய் அலுவலர் வரவேற்றார்
வெளியிடப்பட்ட நாள்: 10/03/2022கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு 10.03.2022 அன்று வருகை புரிந்த மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. லீலா அலெக்ஸ் அவர்கள் புத்தகம் வழங்கி வரவேற்றார்.
மேலும் பலஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு TAHDCO மானியம் -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 09/03/2022TAHDCO முலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு பிவிசி பைப் மற்றும் புதிய மின்மோட்டார் வாங்க மானியம் வழங்கப்படுகிறது -பத்திரிகைச் செய்தி (PDF 26.8KB)
மேலும் பலஉலக மகளிர் தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் மரக்கன்றுகள் நட்டுவைத்தார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 08/03/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக மகளிர் அலுவலர்கள் 08.03.2022 அன்று மரக்கன்றுகளை நட்டுவைத்தார்கள். மற்றும் மாநகர காவல் ஆணையாளர் திரு.பிரதிப்குமார் இ.கா.ப. அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப. அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு. ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப. அவர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் பல