மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 18/10/2022கோயம்புத்தூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், கவுண்டம்பாளையம், அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி, சுகாதார ஆய்வாளர் அலுவலகம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம், மாவட்ட தொழிலக பாதுகாப்பு அலுவலகம், ஐடிஐ பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி ஆகிய இடங்களில் (18.10.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு) பூமா, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வடக்கு மண்டல கோட்டப்பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.(PDF 40KB)
மேலும் பலதமிழ் வளர்ச்சித் துறை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 17/10/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்வளர்ச்சித் துறையின் மூலம் நடத்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுத்தொகைக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 40KB)
மேலும் பலஉலக விபத்து காயம் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 17/10/2022உலக விபத்து காயம் தினத்தினை (World Trauma Day) முன்னிட்டு, கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று(17.10.2022) விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இவ்விழிப்புணர்வு பேரணியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர்.நிர்மலா மற்றும் அரசு மருத்துவர்கள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செவிலியர் மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 17.10.2022 அன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 17/10/202217.10.2022 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.(PDF 45KB)
மேலும் பலகிராம உதவியாளர் பதவிக்கு இணையதள விண்ணப்பம்
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2022கிராம உதவியாளர் பதவிக்கு இணையதள விண்ணப்பம்-செய்தி வெளியீடு
மேலும் பலதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2022கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில்(14.10.2022) உழவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மாண்புமிகு ஒன்றிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங்க் தோமர் அவர்கள் தலைமையில், மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை உற்பத்தி ஆணையர் திரு.சி.சமயமூர்த்தி இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன்., இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.பொள்ளாச்சி வி.ஜெயராமன்(பொள்ளாச்சி), திரு.அம்மன் கே.அர்ஜுனன்(கோவை வடக்கு), திருமதி.வானதி சீனிவாசன்(கோவை தெற்கு), திரு. டி.கே.அமுல்கந்தசாமி (வால்பாறை) […]
மேலும் பலதோட்டக்கலை பயிர்களுக்கு பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் காப்பீடு செய்வீர்
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2022தோட்டக்கலை பயிர்களுக்கு பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் காப்பீடு செய்வீர் – தோட்டக்கலைத்துறை பத்திரிக்கை செய்தி(PDF 20KB)
மேலும் பலசர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தை முன்னிட்டு தீயணைப்பு மற்றும் மீட்புதுறையினரின் மாதிரி ஒத்திகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (13.10.2022) சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை சார்பில், தீயணைப்பு மற்றும் மீட்புதுறையினரின் மாதிரி ஒத்திகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார் . இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலாஅலெக்ஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா, வருவாய் கோட்டாட்சியர்(தெற்கு) இளங்கோ, தனி வட்டாட்சியர்(பேரிடர் மேலாண்மை) ராதாகிருஷ்ணன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் பெ.அண்ணாதுரை, […]
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, தமிழ்நாடு அரசு மற்றும் கோயம்புத்தூர்,உயிர் அறக்கட்டளை இணைந்து “குட்டி காவலர்” மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கி வைப்பதன் அடையாளமாக சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது
வெளியிடப்பட்ட நாள்: 12/10/2022மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் (12.10.2022) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, தமிழ்நாடு அரசு மற்றும் கோயம்புத்தூர்,உயிர் அறக்கட்டளை இணைந்து “குட்டி காவலர்” மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கி வைப்பதன் அடையாளமாக சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி. செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., காவல்துறை […]
மேலும் பலபரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்ட தினம் கொண்டாடப்பட்டது
வெளியிடப்பட்ட நாள்: 07/10/2022கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை சாலையில் மஹாராஜா மஹாலில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட தின விழாவை முன்னிட்டு 07.10.2022 பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டம் துவங்க முக்கிய காரணமாக இருந்த பெருந்தலைவர் காமராஜர், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் திருவிகே.பழனிசாமி கவுண்டர், பாரத ரத்னா சி.சுப்பிரமணியம் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் திருபொள்ளாச்சி நா.மகாலிங்கம், முன்னாள் நீர்வளத் துறை அமைச்சர் பத்மபூஷன் டாக்டர் கே.எல்ராவ் ஆகியோரின் திருவுருவப்படத்திற்கு மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் திருமு.பெ.சாமிநாதன் அவர்கள் அரசின் சார்பில்மலர்த்தூவி மரியாதை […]
மேலும் பல