தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்
வெளியிடப்பட்ட நாள்: 01/11/2022சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை, தேசிய ஒற்றுமை நாளாக கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு 31.10.2022 அன்று தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் எம்.கோகிலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தமிழ்செல்வி, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.செந்தில் அண்ணா, […]
மேலும் பலவடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 29/10/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 29.10.2022 அன்று வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் டாக்டர்.தாரேஸ் அகமது இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர்.பி.அலர்மேல்மங்கை இ.ஆ.ப., பொள்ளாச்சி சார் ஆட்சியர் திருமதி.எஸ்.பிரியங்கா இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் […]
மேலும் பலவரலாற்று சிறப்பு மிக்க பழமையான ஆவணங்கள் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 29/10/2022வரலாற்று சிறப்பு மிக்க பழமையான ஆவணங்கள் பற்றி விவரங்களை கோவை, மாவட்ட ஆவணக்காப்பகத்திற்கு தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். (PDF 39KB)
மேலும் பலமாநில கல்விக் கொள்கை தொடர்பாக மண்டல அளவிலான கருத்துக்கேட்புக் கூட்டம் மாநில கல்விக் கொள்கை உயர்மட்டக் குழுத்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 29/10/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 29-10-2022 அன்று மாநில கல்விக் கொள்கை தொடர்பாக கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான கருத்துக்கேட்புக் கூட்டம் மாநில கல்விக் கொள்கை உயர்மட்டக் குழுத்தலைவர்/ புதுடெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மாண்புமிகு நீதியரசர் திரு.டி.முருகேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாநில கல்விக் கொள்கை உறுப்பினர் செயலர் எ.கருப்பசாமி, உறுப்பினர்கள் அருணா, ஜவஹர்நேசன், ராமானுஜம், திருப்பூர் சார் […]
மேலும் பலதமிழ்நாடு ஆளுநர் கோயம்புத்தூர் வருகை
வெளியிடப்பட்ட நாள்: 27/10/202227-10-2022 அன்று கோயம்புத்தூர் வருகை புரிந்த மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப.,மாநகர காவல் ஆணையாளர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன் இ.கா.ப., மாநகராட்சி ஆணையாளர் திரு.பிரதாப் இ.ஆ.ப, ஆகியோர் வரவேற்றனர்.
மேலும் பலமாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்ட வணிக சங்க நிர்வாகிகள் மற்றும் தொழில் அமைப்பின் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 27/10/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 27.10.2022 அன்று மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. செந்தில்பாலாஜி அவர்கள் கோயம்புத்தூர் மாவட்ட வணிக சங்க நிர்வாகிகள் மற்றும் தொழில் அமைப்பின் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாநகர காவல் ஆணையாளர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப., மேற்கு மண்டல காவல் துறை தலைவர் முனைவர்.சுதாகர் இ.கா.ப., மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன் இ.கா.ப. […]
மேலும் பலகோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 27/10/2022கோயம்புத்தூர் மாவட்டம், பச்சாபாளையத்தில் செயல்பட்டுவரும் கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ஆவின் பொருட்கள் உற்பத்தி பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து 26.10.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, உதவி பொதுமேலாளர்கள் அருண்குமார்(பொறியியல்), அந்தோனி (தரக்கட்டுப்பாடு), சிவசங்கரி(கணக்கு), கோகுல்கார்த்திக்(நிர்வாகம்), டாக்டர்.தனபாலன்(பால்உற்பத்தி மற்றும் உள்ளீடு), துணை பதிவாளர்(பால்வளம்) புவனேஸ்வரி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் வெங்கடேசன், உதவி செயற்பொறியாளர் சுதர்சன் உதவிப்பொறியாளர் மணி விஸ்வநாதன், […]
மேலும் பலஒண்டிப்புதூர் பகுதியில் செயல்பட்டுவரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளியில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 26/10/2022கோயம்புத்தூர் மாவட்டம், ஒண்டிப்புதூர் பகுதியில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் பள்ளிக்கல்வித்துறை மூலம் செயல்பட்டுவரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளியில் 26.10.2022 அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., முதன்மை கல்வி அலுவலர் திரு.இரா.பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.(PDF 35KB)
மேலும் பலமுன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 21/10/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(21.10.2022) முன்னாள் படைவீரர், தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உதவி இயக்குநர்(முன்னாள் படைவீரர் நலன்) மேஜர் சி.ரூபாசுப்புலெட்சுமி, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) முருகேசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கௌசல்யா தேவி, உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.(PDF 35KB)
மேலும் பலஊரக வளர்ச்சித்துறைக்கு வழங்கப்பட்டுள்ள தரக்கட்டுப்பாட்டு வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 20/10/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் (20.10.2022) ஊரக வளர்ச்சித்துறைக்கு வழங்கப்பட்டுள்ள தரக்கட்டுப்பாட்டு வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார். அருகில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி.அலர்மேல் மங்கை, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஆகியோர் உள்ளனர்.
மேலும் பல