Close

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடங்கும் தேதி முடிவுறும் தேதி கோப்பு
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான வீட்டிலிருந்தவாறே வாக்கு பதிவு

மூத்த குடிமக்கள் (ம) மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்தவாறே வாக்கு பதிவு செய்ய வசதியாக வாக்கு பதிவு அலுவலர்கள் நேரடியாக தங்களது இல்லத்திற்கு 12.04.2026, 13.04.2026 மற்றும் 14.04.2026  தேதிகளில் வர உள்ளனர். படிவம் 12D அளித்துள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் அன்றைய தினம் தங்களது இல்லத்தில் இருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

08/04/2026 14/04/2026 பார்க்க (126 KB)
மாவட்ட நலச் சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் காலியாக உள்ள தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அழப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட நலச் சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் காலியாக உள்ள முற்றிலும் தற்காலிகமான ஆய்வக நுட்புநர், கணக்காளர், காசநோய் சுகாதார பார்வையாளர் மற்றும் ஓட்டுநர் பதவிகளுக்கு ஒப்பந்த அழப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

03/03/2026 10/03/2026 பார்க்க (659 KB)
BLO கிட்களை வழங்குவதற்கான டெண்டர்கள் அறிவிப்பு

எதிர்வரும் வாக்காளர் பட்டியல் “சிறப்பு தீவிர திருத்தம் – 2026”-னை கருத்தில் கொண்டு, தேர்தல் ஆணையம் அனைத்து வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கும் ஒரு BLO (Booth Level Officer) கிட் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இந்த கிட் பை, பதிவேடு, எழுதுபொருட்கள், தொப்பி மற்றும் திருத்தப் பணியின் போது தேவைப்படும் பிற அத்தியாவசிய பொருட்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

13/09/2025 19/09/2025 பார்க்க (485 KB)
மாவட்ட ஆட்சியரின் படிப்பிடை பயிற்சித் திட்டம்

மாவட்ட ஆட்சியர் படிப்பிடை பயிற்சி திட்டம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு அரசுத் திட்டங்கள், முதன்மைத் திட்டங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு துறைகளில் சிறப்பு முயற்சிகளை செயல்படுத்துவது குறித்து இளம் மனதுகளுக்குப் பயிற்சித் திட்டத்தை அறிவித்துள்ளது.

04/09/2025 15/09/2025 பார்க்க (400 KB) List (110 KB)
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், 23.08.2025 அன்று காலை 8 மணியளவில் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மெயின் ரோடு, ஈச்சனாரியில் அமைந்துள்ள இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியிலிருந்து உற்பத்தி துறை, ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டி துறை, ஆட்டோமொபைல்ஸ், விற்பனைத்துறை, மருத்துவம் சார்ந்த 250-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்காக 15000-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப் படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு, தொழில் கல்வி பயின்றவர்கள், செவிலியர்கள், பொறியியல் மாணவர்கள் என அனைத்து பிரிவினரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெறலாம். இம்முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை. அனுமதி முற்றிலும் இலவசம். மேலும் தனியார்துறை வேலைவாய்ப்பு குறித்த தகவல்களுக்கு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.

14/08/2025 23/08/2025 பார்க்க (195 KB)
மாவட்ட நல சங்கம்- தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கோவை மாநகராட்சி மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

01/07/2025 18/07/2025 பார்க்க (335 KB) Application (275 KB)
மாவட்ட நல சங்கம்- தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கோவை மாநகராட்சி ஆகிய அலுவலகங்களில் காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

22/05/2025 13/06/2025 பார்க்க (449 KB) Notification May 2025 (344 KB)
பசுமை முதன்மையாளர் விருதுகள் 2024-2025

Tamil Desc : தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) 15.04.2025 அன்று விருதுகளை வழங்க முன்மொழிந்தது. 2024 முதல் 2024 வரையிலான ஆண்டுக்கான பசுமை முதன்மையாளர் விருதுகள் 2024-2025 நிதியாண்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய அமைப்பு/கல்வி நிறுவனங்கள்/ பள்ளிகள்/கல்லூரிகள்/குடியிருப்பு நலச் சங்கங்கள்/ தனிநபர்கள்/ உள்ளாட்சி அமைப்பு / தொழில்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளது. விருது பெற்றவர்களுக்கு ஆண்டுதோறும் 2 தனிநபர்கள்/ நிறுவனங்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.

03/03/2025 15/04/2025 பார்க்க (76 KB)
கோவை மாவட்ட தன்னார்வ இரத்த தான முகாம் அட்டவணை-2024-2025

கோவை மாவட்ட தன்னார்வ இரத்த தான முகாம் அட்டவணை-2024-2025

01/04/2024 31/03/2025 பார்க்க (343 KB)
2024-25 ஆம் ஆண்டிற்கான தினக்கூலி

கோயம்புத்தூர் மாவட்டம் – 2024-25 ஆம் ஆண்டிற்கான தினக்கூலி நிர்ணய செயல்முறை

01/04/2024 31/03/2025 பார்க்க (3 MB)