Close

SAMATHUVAA NAAL PLEDGE

மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

வெளியிடப்பட்ட நாள்: 14/04/2022

டாக்டர். அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கு.சண்முகசந்தரம் ஆகியோர் முன்னிலையில் சமத்துவ நாள் உறுதிமொழியினை 14.04.2022 அன்று மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் எடுத்துக்கொண்டனர்.

மேலும் பல
PARA Sports Events

கோவை விழாவினை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான பாராவிளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 13/04/2022

கோயம்புத்தூர் மாவட்டம் ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுரியில் கோவை விழாவினை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான பாராவிளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

மேலும் பல
TNSTC KMBL AWARD

கோயம்புத்தூர் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு தேசிய அளவிலான எரி பொருள் சிக்கனத்தில் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 13/04/2022

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோயம்புத்தூர் கோட்டத்துக்கு தேசிய அளவிலான எரி பொருள் சிக்கனத்தில் இலக்கை எட்டி சாதனை புரிந்ததற்காக 2 இலட்சத்திற்கான பரிசுத் தொகையும், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை பெட்ரோலியத்துறை அமைச்சரக செயலர் திரு. பங்கஜ் ஜெயின் அவர்கள் கோவை மேலாண்மை இயக்குநர் திரு. ஆ.ஆறுமுகம் அவர்களிடம் வழங்கினார் -பத்திரிகைச் செய்தி

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கோவிட்-19 இறப்பிற்கு கருணைத்தொகை பெற மாண்புமிகு உச்சநீதி மன்றத்தின் புதிய வழிகாட்டுதல் -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 13/04/2022

கோவிட்-19 தொற்று நோயின் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் கருணைத்தொகை பெற மாண்புமிகு உச்சநீதி மன்றத்தின் புதிய வழிகாட்டுதலின்படி உரியகாலத்தில் மனுசெய்து நிவாரணம் பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார் -பத்திரிகைச் செய்தி (PDF 38.5KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

“தேசிய குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான விருதுகள்- 2021-22″க்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 12/04/2022

இந்தியா அரசின் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் “தேசிய குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான விருதுகள்- 2021-22″க்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் தகுதியான தொழில்முனைவோர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன -பத்திரிகைச் செய்தி (PDF 45.5KB)

மேலும் பல
Collector - Disabled People - Scooter Given

முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 12/04/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரத்துடன் கூடிய பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 12.04.2022 அன்று வழங்கினார். (PDF 33.6KB)

மேலும் பல
GDP Photo 11.04.22

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் 11.04.2022 அன்று நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 11/04/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 11.04.2022 அன்று பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF 28.9KB)

மேலும் பல
COLLECTOR OPEN - NATIONAL SURVEY DAY

தேசிய நில அளவை தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 11/04/2022

தேசிய நில அளவை தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 11.04.2022 அன்று துவக்கி வைத்தார். (PDF 42.2 KB)

மேலும் பல
Collector - TB Awareness Rally

தேசிய காசநோய் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 09/04/2022

கோயம்புத்தூர் பந்தயசாலையில் உள்ள சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்திலிருந்து தேசிய காசநோய் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 09.04.2022 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தேசிய சமரச தினம் 09.04.2022 அன்று அனுசரிக்கப்படுகிறது -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 07/04/2022

கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் சார்பில் தேசிய சமரச தினம் 09.04.2022 அன்று அனுசரிக்கப்படுகிறது -பத்திரிகைச் செய்தி (PDF 427KB)

மேலும் பல