Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

உலக நவீன வாசக்டமி இருவார விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு ரதத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 22/11/2022

கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்பநலப்பணிகள் அலுவலகத்தில் உலக நவீன வாசக்டமி இருவார விழாவினை(ஆண்களுக்கான குடும்பநல கருத்தடை – நவீன வாசக்டமி இரு வார விழா) முன்னிட்டு விழிப்புணர்வு ரதத்தை 22.11.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நிர்மலா, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.அருணா, குடும்பநல துணை இயக்குநர் மரு.கௌரி, நகர் நல அலுவலர் […]

மேலும் பல

மாவட்ட ஆட்சியரின் படிப்பிடை பயிற்சித் திட்டத்தின் கீழ் (District Collector’s Internship Programme) தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களுடன் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 21/11/2022

மாவட்ட ஆட்சியரின் படிப்பிடை பயிற்சித் திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களுடன் (District Collector’s Internship Programme) 21.11.2022 அன்று கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலாஅலெக்ஸ், கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி டாக்டர். அலர்மேல்மங்கை இ.ஆ.ப., உதவி ஆட்சியர்(பயிற்சி) செல்வி.சௌமியாஆனந்த், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கோகிலா, குமரகுரு […]

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.11.2022 அன்று நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 21/11/2022

21.11.2022 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். (PDF 215KB)

மேலும் பல

தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தினை முன்னிட்டு, இரத்த தான முகாம் அமைப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 21/11/2022

தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தினை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 21.11.2022 அன்று மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மற்றும் மாவட்ட குருதிபரிமாற்ற குழுமம் சார்பாக பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை 53 இரத்த தான முகாம் அமைப்புகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நிர்மலா, இணை இயக்குநர்(மருத்துவம் மற்றும் ஊரககப்பணிகள்) மரு.சந்திரா, எய்ட்ஸ் கட்டுபாடு அலுவலர்,துணை இயக்குநர் […]

மேலும் பல

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் வளர்ச்சித்திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 20/11/2022

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி (வடக்கு) ஊராட்சி ஒன்றியம், குள்ளக்காபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்டஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், கூடுதல் ஆட்சியர் செல்வி.அலர்மேல்மங்கை இ.ஆ.ப., பொள்ளாச்சி சார் ஆட்சியர் செ.ல்வி.பிரியங்கா, இ.ஆ.ப., உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொ) கமலகண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த், பொள்ளாச்சி நகர் மன்ற தலைவர் […]

மேலும் பல

கொடிசியா அரங்கில்‌ அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 19/11/2022

கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌ கொடிசியா அரங்கில்‌ 19.11.202 அன்று நடைபெற்ற 69-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில்‌ மாண்புமிகு கூடுறவுத்துறை அமைச்சர்‌ திரு.இ.பெரியசாமி, மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர்‌ திரு. செந்தில்பாலாஜி ஆகியோர் பல்வேறு கூட்டுறவு சங்கங்களின்‌ மூலம்‌ அமைக்கப்பட்ட திட்ட விளக்க அரங்குகளை பார்வையிட்டார்கள்‌. அருகில்‌ கூட்டுறவு உணவு மற்றும்‌ நுகர்வோர்‌ பாதுகாப்பு துறை அரசு முதன்மைச்‌ செயலர்‌ டாக்டர்‌.ஜெ.ராதாகிருஷ்ணன்‌ இ.ஆ.ப.,‌ கூட்டுறவு சங்கங்களின்‌ பதிவாளர்‌ திரு.அ.சண்முகசுந்தரம்‌ இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன்‌ இ.ஆ.ப., மாண்புமிகு மாநகராட்சி […]

மேலும் பல

கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு முழுஉருவச்சிலை அமையவுள்ள இடத்தினை மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 18/11/2022

வ.உ.சி பூங்காவில் கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு முழுஉருவச்சிலை அமையவுள்ள இடத்தினை 18.11.2022 அன்று மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.கல்பனாஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலாஅலெக்ஸ், மாநகராட்சி துணை மேயர் இரா.வெற்றிசெல்வன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.நா.கார்த்திக், மண்டல குழுத்தலைவர் மீனாலோகு, வரிவிதிப்பு மற்றும் நிதிக் குழுத்தலைவர் முபசீரா, உதவி ஆணையர் மகேஸ் கனகராஜ், மாமன்ற […]

மேலும் பல

யுவ இந்தியா எனும்‌ சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி கோயம்புத்தூர்‌ ஹிந்துஸ்தான்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியில்‌ நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 18/11/2022

கோயம்புத்தூர்‌ ஹிந்துஸ்தான்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியில்‌ 18. 11. 2022 அன்று நடைபெற்ற யுவ இந்தியா எனும்‌ சாலை பாதுகாப்பு குறித்து கல்லூரி மாணவ மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ வகையில்‌ நடைபெற்ற நிகழ்ச்சியில்‌ மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர்‌ திரு.மு.பெ.சாமிநாதன்‌ அவர்கள்‌ தாங்கள்‌ சார்ந்த துறைகளில்‌ சிறப்பாக செயல்பட்டமைக்காக, டாக்டர்‌. அருண்‌ என்‌.பழனிசாமி, திருமதி.சுவாதி ரோகித்‌, டாக்டர்‌.கே.பிரியா ஆகியோருக்கு விருது வழங்கி சிறப்பித்தார்‌. அருகில்‌ மாநகர காவல்‌ ஆணையாளர்‌ திரு.வி.பாலகிருஷ்ணன்‌ இ.கா.ப., உள்ளனர்‌.

மேலும் பல

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-I (தொகுதி-I) முதல்நிலை எழுத்துத் தேர்வானது எதிர்வரும் 19.11.2022 அன்று தேர்வு நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 17/11/2022

தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-I (தொகுதி-I) முதல்நிலை எழுத்துத் தேர்வானது எதிர்வரும் – எதிர்வரும் 19.11.2022 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில், 49 தேர்வுமையங்களில் உள்ள 18 தேர்வுக்கூடங்களில் காலை 09.30 மணிமுதல் மதியம் 12.30 மணிவரை தேர்வு நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 15081 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர்.(PDF 29KB)  

மேலும் பல

பொள்ளாச்சியில் 27.11.2022 அன்று நடைபெறவுள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 17/11/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வருகின்ற (27.11.2022) அன்று பொள்ளாச்சியில் நடைபெறவுள்ள மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கு.சண்முகசுந்தரம் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலாஅலெக்ஸ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் செல்வி.பிரியங்கா, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) […]

மேலும் பல