Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

தேசிய அளவிலான மகளிர் சுய உதவிக்குழுக்கள் பொருட்களின் சாரஸ் கண்காட்சியினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 05/03/2023

கோயம்புத்தூர் மாநகராட்சி, வ.உ.சி மைதானத்தில் 05.03.2023 அன்று தேசிய அளவிலான மகளிர் சுய உதவிக்குழுக்கள் பொருட்களின் சாரஸ் கண்காட்சியினை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அரசு முதன்மைச் செயலாளர் திருமதி.பெ.அமுதா இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குநர் மற்றும் […]

மேலும் பல

தென்னை விவசாயிகள் பயன்பெற விலை ஆதரவு திட்டத்தின்கீழ் கொப்பரை கொள்முதல் ஏப்ரல் 2023 முதல் தொடக்கம்

வெளியிடப்பட்ட நாள்: 27/02/2023

தென்னை விவசாயிகள் பயன்பெற விலை ஆதரவு திட்டத்தின்கீழ் கொப்பரை கொள்முதல் ஏப்ரல் 2023 முதல் தொடக்கம். விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தாங்கள் உற்பத்தி செய்யும் கொப்பரையினை விலை ஆதரவு திட்டத்தின்கீழ் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக விற்பனை செய்து பயன்பெறுமாறு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 35KB)                                 […]

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.02.2023 அன்று நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 27/02/2023

27.02.2023 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கிராந்தி குமார் இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். (PDF 220KB)  

மேலும் பல

பள்ளிக்கல்வித் துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கல்லூரிக்கனவு களப்பயணத்தை மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 26/02/2023

பள்ளிக்கல்வித் துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கல்லூரிக்கனவு களப்பயணத்தை மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பொது நூலக இயக்குநர் திரு.க.இளம்பகவத் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., முதன்மை கல்வி அலுவலர் திரு.பூபதி, பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி செயலர் முனைவர்.கண்ணையன், பி.எஸ்.ஜி கல்லூரி முதல்வர் பிருந்தா, கல்லூரி கல்வி இணை […]

மேலும் பல

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் மாபெரும் சுய உதவிக்குழு கடன் வழங்கும் முகாமில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகளை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 24/02/2023

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் மாபெரும் சுய உதவிக்குழு கடன் வழங்கும் முகாமில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மதிப்பில் கடனுதவிகளை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கு.சண்முகசுந்தரம் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி, இ.ஆ.ப., இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் நீ.விஜயா, முதன்மை மேலாளர் ரோகிணி, மகளிர் திட்டம் திட்ட அலுவலர் செல்வம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) எம்.சபி அகமது உட்பட அரசுத்துறை அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் […]

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 24/02/2023

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் செல்வி.பிரியங்கா இ.ஆ.ப. இணை இயக்குநர் வேளாண்மை முத்துலட்சுமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) எம்.சபி அகமது, தோட்டக்கலை துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி, விவசாயிகள் சங்கத் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர். (PDF 220KB)  

மேலும் பல

ஜி.என்.மில்ஸ் சந்திப்பு பகுதியில் நடைபெற்று வரும்‌ மேம்பாலப்‌ பணியினை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 23/02/2023

ஜி.என்.மில்ஸ் சந்திப்பு பகுதியில் தேசிய துறையின்‌ மூலம்‌ நடைபெற்று வரும்‌ மேம்பாலப்‌ பணியினை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ திரு.கிராந்திகுமார்‌ பாடி, இ.ஆ.ப, அவர்கள்‌ 23.02.2023 அன்று நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌. அருகில்‌ இந்த ஆய்வின் போது தேசிய நெடுஞ்சாலை, கோட்டப்பொறியாளர்‌ ரமேஷ், உதவி கோட்டப்பொறியாளர் முரளிகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) எம்.சபி அகமது உட்பட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர்‌. (PDF 230KB)

மேலும் பல

சிறுவாணி இலக்கியத் திருவிழா- 2023

வெளியிடப்பட்ட நாள்: 23/02/2023

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிறுவாணி இலக்கியத் திருவிழா 25.02.2023 மற்றும் 26.02.2023 ஆகிய இரண்டு நாட்கள் பூ.சா.கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.மாணவர்கள், தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், இலக்கிய அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த மாபெரும் சிறுவாணி இலக்கியத் திருவிழாவில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி, இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.  (PDF 40KB) –     பத்திரிகைச் செய்தி  

மேலும் பல

தமிழ்நாடு முதலமைச்சர்‌ கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ தொடங்கி வைத்தார்‌

வெளியிடப்பட்ட நாள்: 23/02/2023

கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌, நேரு விளையாட்டு மைதானத்தில்‌, தமிழ்நாடு முதலமைச்சர்‌ கோப்பைக்கான விளையாட்டு போட்டியில்‌, பள்ளி மாணவ,மாணவியர்களுக்கான தடகள போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.கிராந்திகுமார்‌ பாடி, இ.ஆ.ப அவர்கள்‌ 23.02.2023 அன்று தொடங்கி வைத்தார்‌. அருகில்‌ மாவட்ட விளையாட்டு மற்றும்‌ இளைஞர்‌ நலன்‌ அலுவலர்‌ ரகு உட்பட மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்‌ ஆகியோர்‌ உள்ளனர்‌.

மேலும் பல

பட்டியலினம் மற்றும் பழங்குடியின முதல் தலைமுறை தொழில் முனைவோர் தொழில் துவங்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அழைப்பு

வெளியிடப்பட்ட நாள்: 23/02/2023

பட்டியலினம் மற்றும் பழங்குடியின முதல் தலைமுறை தொழில் முனைவோர் தொழில் துவங்க மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி, இ.ஆ.ப., அவர்கள் அழைப்பு. (PDF 40KB )                                                                          […]

மேலும் பல