Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் 

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026

கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.க.விக்னேஷ் அவர்கள் தலைமையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்ந்த பணி ஆய்வுக்கூட்டம்  இன்று  (01.06.2026)  நடைபெற்றது. (PDF 235KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 01-06-2026

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026

கோயம்புத்தூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF  223KB)

மேலும் பல

பழங்குடியினருக்கான TNPSC சிறப்பு பயிற்சி மையம்

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ், இயங்கும் கோவை, ஆதிதிராவிடர் / பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டும்  நிலையம் சார்பில்  தோலம்பாளையம், வெள்ளியங்காடு மற்றும் பாலமலை ஆகிய பகுதிகளை சார்ந்த பழங்குடியின மக்கள் பயன்பெறும் வண்ணம் வெள்ளியங்காடு கிராமத்தில் உள்ள சமுதாயகூடத்தில் இந்நிலையத்தின் சார்பில் பழங்குடியினருக்கான  இலவச கட்டணமில்லா  சிறப்பு TNPSC பயிற்சி மையம் துவங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பானது வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.  (PDF 255KB)

மேலும் பல

மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் நீலம்பூர் முதல் மதுக்கரை வரை உள்ள NH-544 கோயம்புத்தூர் புறவழிச்சாலையை விரிவுபடுத்தும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் .

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026

கோயம்புத்தூர் மாவட்டம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சார்பில் நீலம்பூர் முதல் மதுக்கரை வரை உள்ள NH-544 கோயம்புத்தூர் புறவழிச்சாலையை 2 வழிச்சாலையிலிருந்து இரு புறசேவைச் சாலைகளுடன் கூடிய நவீன 6 வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணிகளை மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் . (PDF 74KB)

மேலும் பல

பொதுத் தேர்தலுக்கு முந்தைய கடைசி 72 மணி நேரத்திற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் (SOP) குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் பின்பற்றுவது தொடர்பான கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026

கோயமுத்தூர் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு முந்தைய கடைசி 72 மணி நேரத்திற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் (SOP) குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் பின்பற்றுவது தொடர்பான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF  83KB)

மேலும் பல

2026 கேரள தேர்தலை முன்னிட்டு கோயம்புத்தூர் எல்லைப் பகுதிகளில் மதுபான கடைகள் மூடல்

வெளியிடப்பட்ட நாள்: 04/04/2026

கேரள மாநிலத்தில் 2026 ஆம் ஆண்டு கேரள சட்டமன்றப் பொதுத் தேர்தல் 09.04.2026 அன்று நடைபெற உள்ளதால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 135(C)-இன் கீழ், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கோயம்புத்தூர் மாவட்டஎல்லைப் பகுதிகளில் 5 கி.மீ. சுற்றளவிற்குள் அமைந்துள்ள, அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள மதுக்கூடங்கள், மேலும் FL2 முதல் FL11 வரையிலான (FL6 தவிர) உரிமம் பெற்ற வளாகங்களை 07.04.2026 அன்று காலை 10.00 மணி முதல் […]

மேலும் பல

சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களின் அடையாள சரிபார்ப்பு வழிமுறைகள் அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 03/04/2026

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் எதிர்வரும் 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும் போது வாக்காளர் அடையாளம் காணும் செயல்முறைகள் குறித்த வழிமுறைகள் அறிவிக்கப்படுகின்றன. (PDF 71KB)

மேலும் பல

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் சிங்காநல்லூரில் 100% வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 02/04/2026

கோயம்புத்தூர் மாவட்டம், 121 சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 100% வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  (PDF 223KB)

மேலும் பல

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அட்டவணை அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 02/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026-னை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், (Representation of the People Act, 1951) இன் பிரிவு 30 மற்றும் 56ன்கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில், கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெறும் வாக்குப்பதிவிற்கான தேதி மற்றும் நேரம் தொகுதிகளிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று காலை 07.00 மணி முதல் மாலை 06.00 […]

மேலும் பல

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் 100% வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை ஒட்டி வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2026

கோயம்புத்தூர் மாநகராட்சி (120 – கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட) பகுதியில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுதேர்தல் – 2026ஐ முன்னிட்டு 100% வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை ஒட்டி வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 226KB)

மேலும் பல