மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் சமூகநீதி விடுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026கோயமுத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டம், சொக்காம்பாளையத்தில் செயல்பட்டு வரும் சமூகநீதி விடுதிகளை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வி.சம்பத்குமார் அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 55KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் 100% 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 73 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், 2025 – 2026ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 73 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க. கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கி, பாராட்டினார். (PDF 145KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் உலக சுற்றுச்சூழல் தினத்தில் 1200 மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026கோயம்புத்தூர் மாவட்டம் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு செட்டிபாளையம் பேரூராட்சி, ஓராட்டுகுப்பை பகுதியில் 1200 மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 243KB)
மேலும் பலமுன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கான குறைதீர்வு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 05/06/202609.06.2026 அன்று மெட்ராஸ் இன்ஜினியர் குரூப் (The Madras Engineer Group Records) ஆவணக் காப்பகம் நடத்தும் திரளணியில், இராணுவத்தின் அனைத்து படைப்பிரிவுகளிலும் பணியாற்றி போரில் உயிர்நீத்த மற்றும் ஊனமுற்ற படைவீரர்களின் சார்ந்தோர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கான ஓய்வூதியம், SPARSH மற்றும் இதர குறைகளுக்கான குறைதீர்வு நிகழ்ச்சி 09.06.2026 அன்று காலை 09.00 மணியளவில் பீளமேடு, அவினாசி ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. (PDF 192KB)
மேலும் பலவட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026கோயம்புத்தூர் மாவட்டத்தில், 1435-ம் பசலிஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) குறிப்பிட்ட நாட்களில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ள கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவிக்கை விடுத்துள்ளார்.(PDF 100KB)
மேலும் பலகோவை அரசுப் பொருட்காட்சி 2026: முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 03/06/2026கோயம்புத்தூர் மாவட்டம் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், வ.உ.சி மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி – 2026 நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து அரசு துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 243KB)
மேலும் பலமகளிர் விடுதிகள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கான உரிமப் பதிவு மற்றும் புதுப்பித்தல்
வெளியிடப்பட்ட நாள்: 03/06/2026கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் முதியோர் இல்லங்கள் அனைத்தும் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் ஒழுங்குமுறைசட்டம், 2014-இன்படி உரிமம் பெறாமல் செயல்படுவது குற்றம் என்றும், இணையதளத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பித்தல் மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 418KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 02/06/2026கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 83 KB)
மேலும் பலMSME யின் அவசரகால கடன் வரம்பு உத்தரவாதத் திட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 02/06/2026கோயமுத்தூர் மாவட்டம், கொடிசியா அலுவலகத்தில் எதிர்வரும் 05.06.2026 அன்று அவசரகால கடன் வரம்பு உத்தரவாதத் திட்டம் (ECLGS 5.0) குறித்த MSME விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. (PDF 226KB)
மேலும் பலபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர் / மாணவியர்களுக்கான விடுதிகள்
வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026தமிழ்நாடு அரசால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் /மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் நல மாணவர் / மாணவியர்களுக்கென மொத்தம் 25 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. (PDF 143KB)
மேலும் பல