Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் சூலூரில் 100% வாக்களிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2026

கோயம்புத்தூர் மாவட்டம், 116 சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 100% வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. (PDF 228KB)    

மேலும் பல

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பழங்குடியினர் மக்களிடம் 100% வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

வெளியிடப்பட்ட நாள்: 31/03/2026

கோயம்புத்தூர் மாவட்டம், 111- மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபனாரி கிராமத்தில், 100% வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் பழங்குடியினர் மக்களிடம் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  (PDF 228KB)  

மேலும் பல

மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு எதிர்வரும் 01.04.2026 பங்குனி உத்திரம் தினத்தன்று நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை

வெளியிடப்பட்ட நாள்: 30/03/2026

மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் எதிர்வரும் 01.04.2026 அன்று பங்குனி உத்திரம் தினத்தன்று மேற்படி நாளில் அதிக அளவில் பக்தர்கள் வருவதை கருத்தில் கொண்டு மலைக்கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. பக்தர்கள் இரண்டு சக்கர வாகனங்கள் வழியாகவும், மலைப்படிகள் வழியாகவும், திருக்கோயிலின் பேருந்து மற்றும் திருக்கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு பேருந்துகளில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் விழாவிற்கான முன்னேற்பாடுகளை திருக்கோயில் தக்கார் மற்றும் துணை ஆணையர் / செயல் அலுவலர் […]

மேலும் பல

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 29/03/2026

கோயம்புத்தூர் மாவட்டம், 119 – தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குனியமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, 116 – சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூலூர் ஆர்.வி.எஸ் கலை அறிவியல் கல்லூரி மற்றும் 120 – கோவை (தெற்கு) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்மலா கலை அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு […]

மேலும் பல

எதிர்வரும் 31.03.2026 செவ்வாய்கிழமை மகாவீர் ஜெயந்தி தினத்தன்று மதுபானக் கடைகள் மூட உத்திரவிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 27/03/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள்/பார்கள் (FL1) பொழுதுபோக்கு மனமகிழ்மன்றங்களில்(FL2) செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில்(FL3) செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டல் (FL3A), சுற்றுலாத்துறை மூலமாக நடத்தப்படும் மதுக்கூடங்கள்(FL3AA) மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை (FL11) உள்ளிட்ட அனைத்து உரிமத்தளங்களையும் எதிர்வரும் 31.03.2026(செவ்வாய்கிழமை)மகாவீர் ஜெயந்தி(MahavirJayanti )தினத்தன்று (Dry day) மூட உத்திரவிடப்பட்டுள்ளது. (PDF 403KB)

மேலும் பல

இந்திய இராணுவ ஆட்சேர்ப்பு 2027

வெளியிடப்பட்ட நாள்: 27/03/2026

இந்திய இராணுவ ஆட்சேர்ப்பு 2027 பற்றிய செய்தி வெளியீடு  (PDF 793KB)

மேலும் பல

காவல் துறையில் “ஆர்டர்லி சிஸ்டம்” பற்றிய செய்தி வெளியீடு

வெளியிடப்பட்ட நாள்: 27/03/2026

காவல் துறையில் “ஆர்டர்லி சிஸ்டம்” பற்றிய செய்தி வெளியீட. (PDF 822KB)

மேலும் பல

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு குறித்த குறும்படம் ஒளிபரப்பு செய்யும் பணியினை கொடி அசைத்து துவக்கி வைத்து, விழிப்புணர்வு குறும்படத்தை பார்வையிட்டார் .

வெளியிடப்பட்ட நாள்: 26/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026- ஐ முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு குறித்த குறும்படம் ஒளிபரப்பு செய்யும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்து, விழிப்புணர்வு குறும்படத்தை பார்வையிட்டார் . (PDF 26KB)

மேலும் பல

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் 2026யினை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் 100% வாக்களிப்பதின் அவசியம் குறித்து முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் மகளிர்கள் பங்கேற்ற இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். (PDF 56KB)

மேலும் பல

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் முதற்கட்ட சமவாய்ப்புக்கு உட்படுத்துதல் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-னை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் முதற்கட்ட சமவாய்ப்புக்கு உட்படுத்துதல் (First Randomisation) மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF  416KB)  

மேலும் பல