மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 06/09/2026கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில், 2026–2027 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 71KB)
மேலும் பலவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை அமைப்பாளர்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 06/09/2026கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சிலை அமைப்பாளர்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் 05.09.2026 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 69KB)
மேலும் பலஅன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் செப்.8-ல் நடைபெறும்
வெளியிடப்பட்ட நாள்: 05/09/2026கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு அரசுத் துறைகள் இணைந்து நடத்தும் சிறப்பு முகாம், 08.09.2026 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இம்முகாமில் UDID அட்டை பதிவு மற்றும் புதுப்பித்தல், மருத்துவச் சான்றிதழ், உதவி உபகரணங்கள், கல்வி மற்றும் பராமரிப்பு உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், ஆதார் மற்றும் […]
மேலும் பலசீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 05/09/2026மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, அரசு நிலங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை கண்டறிந்து அகற்றும் பணிகள் தொடர்பாக, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில் 03.09.2026 அன்று, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. (PDF 228KB)
மேலும் பலரூ.1.55 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்களை மாண்புமிகு அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
வெளியிடப்பட்ட நாள்: 05/09/2026கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் மொத்தம் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்களை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத்குமார் அவர்கள், மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. க. விக்னேஷ் அவர்கள் முன்னிலையில், இன்று (05.09.2026) பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதில், பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.55.50 இலட்சம் மதிப்பில் புதிய சித்த மருத்துவ வெளிநோயாளிகள் பகுதி, ஆலம்பாளையம் மற்றும் ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் தலா […]
மேலும் பலமாண்புமிகு 155-வது பிறந்தநாளை முன்னிட்டு வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அமைச்சர் மலர்மாலை அணிவித்து மரியாதை
வெளியிடப்பட்ட நாள்: 05/09/2026கோயம்புத்தூர் மாநகராட்சி, வ.உ.சி. மைதானத்தில், கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (05.09.2026) மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத்குமார் அவர்கள் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். (PDF 68KB)
மேலும் பலவிக்சித் பாரத் (வளர்ச்சியடைந்த இந்தியா) இளம் தலைவர்கள் உரையாடல் – 2027
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026விக்சித் பாரத் (வளர்ச்சியடைந்த இந்தியா) இளம் தலைவர்கள் உரையாடல் – 2027 – கோயம்புத்தூர் மாவட்ட இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்க அழைப்பு English –(PDF 351KB) Tamil – (PDF 80KB)
மேலும் பலவிநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள்
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கிவருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடி நீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசுகட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின் படி (www.tnpcb.gov.in) என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் […]
மேலும் பலடாப்செட்கோ கடன் திட்டங்களுக்கான கடன் மேளா செப்.7-ல் நடைபெறும்
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினருக்காக குறைந்த வட்டி விகிதத்தில் பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கான கடன் மேளா 07.09.2026 அன்று காலை 10.30 மணிக்கு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. ஆட்டுப்பண்ணை, ஹோட்டல், ஜவுளிக்கடை உள்ளிட்ட தொழில்களுக்கு தனிநபர் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கு சிறுதொழில் கடன் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில கல்விக் […]
மேலும் பலசுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026கோயம்புத்தூர் மாவட்டம், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செலக்கரச்சல் மற்றும் வாரப்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 220KB)
மேலும் பல